புதன், செப்டம்பர் 19, 2012

கல்பாக்கம் அணு உலைக்குப் பக்கத்தில் எரிமலையா?


சென்னைக்கு அருகில் எரிமலை ஒன்று உறங்கிக் கொண்டிருப்பதாக வந்துள்ள செய்தியை ஏற்கனவே படித்திருக்கிறோம்.   ஆனால், பன்னாட்டு அணு சக்தி  முகமையும் அதைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதாகவும், இது இந்திய அணுசக்திக் குழுவினர் கண்ணுக்கும் எட்டியுள்ளதாகவும் வந்துள்ளதே புதிய செய்தி.

http://www.hindustantimes.com/India-news/Bangalore/Dormant-undersea-volcano-near-Kalpakkam-atomic-plant/Article1-931823.aspx

பொதுவாக எரிமலைகள் திடீரென வெடிப்பதில்லை.  அதன் அடையாளங்கள், சிறிய நில நடுக்கங்கள், எரிமலைக் குழம்புகளின் ஓட்டம், என்று பல சிறுகச் சிறுகத் தெரிய வரும்.

அப்படி ஒரு எரிமலை அடையாளம் தெரியவந்தால், கல்பாக்கத்தை எப்படிப் பாதுகாப்பது என்பதற்கான திட்டங்களை அணு சக்தி  ஆணைக்குழு அறிவிக்க வேண்டும்.  உடனடியாகச் செய்யத் தேவையில்லை.  ஆனால் இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

அதே போல், அணுமின் நிலையத்துக்கு மட்டுமல்லாமல், பாண்டிச்சேரி முதல் சென்னைக்கரை வரை வாழும் பெருந்திரளான மக்கள் கூட்டத்துக்கு இதனால் என்ன ஆபத்து என்றும் பார்க்க வேண்டும்.  இது சற்றுத் தொலைவில் இருப்பதால், எரிமலைக் குழம்பால் தொல்லையில்லை.  நில நடுக்கங்களால் தொல்லை வரும்.  ஏனெனில், தமிழ்நாட்டின் கட்டிடங்கள் நில நடுக்கத்தைத் தாங்கக் கூடியவை அல்ல. சென்னையில் பல அடுக்குமாடிக் கட்டிடங்களில் தரைத்தளத்தை வண்டி நிறுத்தப் பயன்படுத்தி, கட்டிடத்தைத் தூண்களில் தாங்குகிறார்கள்.  நில நடுக்கம் ஏற்பட்டால் இப்படிப் பட்ட கட்டிடங்கள் சரியும்.

லாஸ் ஏஞ்சலஸில் 1994 ஜனவரியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இப்படிப் பட்ட கட்டிடங்கள் சரிந்தன.  தரைமட்டத்தில் இருந்த வீடுகளும் உடைந்தன.  எனது வீட்டுக்கு எதிர்வரிசையிலும், பின் வரிசையிலும் இருந்த வீடுகள் சேதமாயின.  என் வீட்டில் தரையில் விரிசல் விட்டது.  சுவற்றில் சிறிய விரிசல்.  மற்றபடி தப்பிப் பிழைத்தேன்.

நிலநடுக்கங்கள் கூடிய கலிஃபோர்னியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்த பட்டறிவில் சொல்லுகிறேன்.  மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று வந்தால் ஒழிய, பெரும்பாலான மக்கள் இறப்புகளைத் தவிர்க்க முடியும்.  கட்டிடங்கள் சிதையும்.  ஆனால் மீளக் கட்டி விடலாம்.

இந்த எரிமலையால் உடனடியாக ஆபத்து ஏதும் இல்லை.

ஆனால், வருமுன் காப்பவன் தான் அறிவாளி.

கொஞ்சம் கூடுதலான ஆராய்ச்சியும், ஒரு தற்காப்புத் திட்டமும் தேவை.

மற்றபடி, கல்பாக்கத்தின் சிக்கல் எரிமலையோ, நில நடுக்கமோ அல்ல.  அது குறித்து எச்சரிக்கை தேவை.  ஆனால், அச்சம் தேவையில்லை.

"Ignorant" fishermen and "educated" columnists


This is yet another of my "rare" blog in English. My apologies.

Some "educated" columnists have been mocking the "ignorant" fishermen for not trusting the big names and instead following Mr. S.p. Udayakumar

I responded to a thread in Tamil Manram mailing list and thought that even though I have been writing about it a lot in facebook, you may be interested in some excerpts:

-----------------------------------------------------------------------------------------------:

Now, does Tamil Nadu need the plant immediately to solve its problems?  Will KKNPP bridge the gap between the demand and supply?

Here is a calculation showing that from the 2000 MW plant, Tamil Nadu is likely to get about 305 MW.

Power benefits for Tamil Nadu from KKNP 

What are Tamil Nadu's power needs?  What are its power capacities?  You can get that from the Tamil Nadu government's energy policy note at:

Tamil Nadu government's Energy policy note 

Contrary to what you may have been led to believe, nuclear power (167 MW from Kalpakkam, page 17) is but a tiny fraction of Tamil Nadu's present installed capacity of (17936 MW, page 12) while wind power alone generates 6696 MW (page 13).  The problem with wind power is that there are not enough distribution lines to take the power from wind mills.  And another thing.  A lot of these power is wasted and lost to Distribution and Transmission losses as well as theft.  Presently almost one third of the power generated is lost and that is 6000 MW.  Much more than the 305 MW that KKNPP may provide.

Wouldn't it make sense then to fix these problems first?  Fix the T&D losses, power theft, fix the distribution problem to take more of wind power and increase the Solar energy from mere 10 MW to 1000 MW or even more?  And all at a fraction of the cost of nuclear power plants and without any of the huge risks that come with nuclear power plants?  Why is the government adamant about nuclear power even though it is expensive, high risk to people and produces very little to meet the energy demands?

Good question.

And you would expect the "educated" columnists to answer that right?

Wrong.

Read the interview of Neeraj Jain at  http://www.thiruvalluvar.in/2012/09/interview-neeraj-jain-fighting-for.html  and see what he says.  In case you don't have the time to click the link, here is the summary:

"This expansion of nuclear energy is a follow-up to the Indo-US nuclear deal [in 2008]. The Indian government agreed to buy US$150 billion worth of nuclear reactors, equipment and other materials from the United States of America (US) in return for the US inking the agreement. Indian Prime Minister Manmohan Singh's special envoy, Shyam Saran, also promised that US companies would benefit for decades from Indian orders for military equipment. The quid pro quo was for the US to modify its laws and allow India to engage in nuclear commerce; from which it had been blocked after its nuclear tests in 1974.

The US also lobbied with the Nuclear Suppliers Group (NSG) – which is an association of 45 countries which export uranium and nuclear technology – to grant India the waiver to engage in civilian nuclear trade, despite not having signed the Nuclear Non-Proliferation Treaty (NPT). In return, the Indian government promised the NSG countries that their companies would receive lucrative contracts in India. This was candidly admitted in an article in a leading newspaper of Maharashtra by the former chief of India’s Department of Atomic Energy, Anil Kakodkar.

This is the real reason behind the Indian government opening its doors to Western nuclear energy companies. After putting the country on sale, it is now strutting about claiming that it has become a 'nuclear super-power', in addition to its claim to having become an 'economic super-power’."

You wouldn't have found out any of these by reading the newspapers or watching TV or reading your favourite columnists.

It is still difficult to understand why big names are supporting the NPP even though they are perhaps not getting rich with the "commissions."  Perhaps they sincerely believe that this is the only way to get the bomb grade material for India's nuclear arsenal.  With the IAEA cameras watching these plants, that is going to be very difficult. Now the military plants are different from civilian plants.  And KKNPP is civilian.

And in a post-Fukushima world, the standards of safety are much higher.

And in a democracy, people are entitled to ask tough questions of their government and they deserve an answer.  Not innuendos.  Not insults.  Not arrests.  Not buzzing over their heads with coastguard planes.  Those are the actions of dictators.

In a democracy, scientists and engineers and governments are accountable to the people.

One does not insult them as ignorant fishermen.

They are aware of the promises that the nuclear industry made to the Japanese people.

They know the cost of trusting their leaders, their engineers and their scientists.

Fukushima.

Can it happen here?

No one can honestly say no.

It doesn't need an earth quake.

It doesn't need a tsunami.

All it needs is for some process, some backup process to fail.

Some day.

Any day.

And the results are dire.

And the people who would pay with their lives and lose the livelihood of generations yet to come, are protesting.

You don't have to agree with them.

You don't have to support them.

But you have no right to mock them with smug superiority.

Because, they know what they are doing.

And you don't.

ஞாயிறு, ஜூலை 22, 2012

History and Propaganda - Responsibility of Historians

History and Propaganda - Responsibility of Historians

This is a rare post in English, but I think this needs to be read widely.  I am a subscriber to the Facebook group "Rare Book Society of India."  This is an amazing group that introduces out of print books that contain extremely interesting information, mostly about India, several times in a week.  If you have a Facebook account, I strongly recommend this group for you to join, if you like old books.

While I like their posts just for their books, it is rare that they would choose to publish an entire preface to a book. Today they did.  And it is breathtaking.  The details of the book are as follows:



Digital Rare Book:
The Mughal Empire From Babar To Aurangzeb
By S.M. Jaffar
Published by S. Muhammad Sadiq Khan, Peshawar - 1936

You can read the book Online at:

http://bit.ly/Mh3ypA

and you can download pdf Book at:

http://bit.ly/QnocsO

Let us come to the preface.  As you can see, the book was published in 1936.  Yes, 1936, a full decade before partition of India.  And already enough communal clashes have happened that the author worries about accuracy of history and it potential propaganda value that sets one community against another.  This should be read in the background of what else was happening around the world at that time.  Hitler, Mussolini and Stalin were in power.  Fascism was the dominant ideology of the "civilized" west.  The English and other colonial powers believed in their natural supremacy and even the United States was quite backward with its racist laws and supremacist attitude towards the rest of the world.  The Japanese imperial powers looked down on fellow Asians and India, though under the British rule, was deeply divided along religious and other fault lines.

As history book that outlines the Mughal's rule of India, written by a muslim, then cannot ignore the impact it will create on fellow Indians.  And the author doesn't disappoint.  The preface is brilliant.  It sets the right tone for reading history for its own sake, to understand the past, but not as a tool for righting the historical wrongs or to avenge for the past.  This has particular relevance for Tamil history as well.  This is not an apologist's tract.



Read the preface in its entirety and then the book.  (I have highlighted and italicized the sections that I found interesting).


--------------------------------




PREFACE :

ONE should not raise one's pen to write history unless one is equipped with a thorough knowledge of the original sources and a clear conscience. In order to obtain correct information, it is absolutely essential to approach history with an unprejudiced mind and without preconceived notions. The evidence thus collected from the huge mass of historical literature that has come down to posterity from the pen of the contemporary chroniclers must be carefully sifted and pieced together in such a way as to present an accurate account of the past.

History must not be used as an instrument of propaganda even in the best of causes ; if used in a wrong cause, it may result in filling streets with human blood. Volumes written on the Muslim Period of Indian history have voluminously added to the volumes of communal hatred and bigotry. Whatever the aims of their authors, the text -books on Indian history, particularly on the Muslim Period, teem with exaggerations, distortions and timid suppression of facts, so much so that they tend to set one community at the throat of the other.

False history has done more than a mere wrong to the cause of national unity and inter-communal amity in India. A retrospective glance at the present state of affairs will not fail to reveal to the reader the fact that the teaching of wrong history, more than anything else, is responsible for the recurring riots among the different communities of India. The sooner, therefore, such books are dispensed with, the better for the peace and prosperity of India.

Born and brought up in communal atmosphere, we, Indians, see everything with communal glasses and therefore get a gloomy view. The obvious result is that the best of Muslim monarchs, statesmen and scholars have been painted in the darkest of colours and condemned as bigots and intolerants, nay, as blood-thirsty tyrants. As things stand at present, communal harmony without correct history is a dream which cannot be realized. The whole of Indian history, therefore, requires to be re-written in the right spirit, 'not so much from the point of view of occurrences at the capitals of various states as in order to delineate the spread of culture and to demonstrate the value of its present composite form, so that our people may not be led away by the false notion that whatever paraphernalia of civilization we posset does not go back to more than a century and a half'.

Some time ago the Punjab Government appointed a Special Committee to see into the subject. The Committee investigated the matter and made some useful recommendations. The same point regarding the re-writing of the whole of Indian history, particularly the Muslim Period, was stressed at Poona at the All-India Historical Conference in 1934 by Dr. (now Sir) Shafaat Ahmad Khan who presided over its deliberations and suggested the appointment of a Mss. Commission for the purpose. How far the objects aimed at have been achieved, I do not know. Some six years ago, while I was a student, I too felt the same necessity after making an independent study of the Muslim Period and set myself to the task in right earnest. Remotely removed as I was from big educational centres, I was consequently deprived of all facilities for research. It was my love for my subject (history) that drove me from place to place in search of books drawn upon for material and the result is The Mughal Empire which I now submit to the judgment of the public.

The Mughals are no more. Posterity may pause and pronounce judgment of their actions and administrations ; but to be fair and free from fallacy, it is necessary to bear five things in mind : viz., (1) the background, (2) the spirit of the age (3) the conditions of the country (4) the tendencies of the times, and (5) the time that has elapsed since the fall of the Mughal Empire. The background in the case of Mughal Emperors was Islam on the one hand and Persian traditions on the other. In the case of Shah Jahan and Aurangzeb, Islam had a great influence on their actions, whereas Persian traditions played a prominent part in determining the acts and administrations of the rest of the Great Mughals. The spirit of the age, the conditions of the country and the tendencies of the times too had a great share in shaping their policies. While taking these four factors into consideration, allowance must also be made for the fifth the time that has scanned the interval between the fall of the Mughal Empire and the establishment of British Dominions in India time that has made marvelous improvements in and additions to the existing knowledge of man and changed his conception of things.

Since the book has been intended chiefly for students in schools and colleges as well as for the general reader, I have constantly kept their needs in view and therefore avoided burdening it with numerous footnotes, though I have fully tapped the sources of my information, both original and secondary, catalogued at the end of the book, and referred to my authorities on controversial topics, such as the alleged apostasy of Akbar and the so-called bigotry of Aurangzeb, topics on which I have differed from modern historians and suggested a new line of thought.

Last, but not the least, my unreserved thanks are due to all those writers, mediaeval and modern, whose monumental works I have consulted for constructing this narrative ; to the Hon'ble Sir Abdul Qadir for writing the Introduction ; to my brother S. M. Raza, B. A., for preparing the Index and to my learned officer, the Judicial Commissioner, N.W.F.P., for permitting me to publish this book.

Peshawar City : S. M. JAFFAR.

1st October, 1936.

வியாழன், ஏப்ரல் 12, 2012

சித்திரைப் புத்தாண்டும் பை என்ற மாறிலியும்


சித்திரையில் புத்தாண்டா, தையில் புத்தாண்டா என்று வெட்டி மடிபவர்களில் எத்தனை பேர் உண்மையிலேயே இப்படி ஆண்டுகளைக் கணக்கீடு செய்வது பற்றி ஆராய்ந்து பார்த்திருப்பார்கள்?  தமிழ் இலக்கியங்களில் எப்போது தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடினார்கள் என்று தேடிப்பார்த்தால், தேடுபவர்களைப் பொருத்து தை, சித்திரை, ஆவணி என்று வெவ்வேறு விடை கிடைக்கும்.  தமிழர்கள் ஆண்டுகளையும், மாதங்களையும், கிழமைகளையும், நாள்களையும் எப்படிக் கணக்குப் போட்டார்கள்?  நமக்குத் தெரியாது.

சித்திரைதான் புத்தாண்டு என்று வாதிடுபவர்களுக்க்குச் சித்திரை வேண்டும் என்பதை விட, தை வேண்டாம் என்பதுதான் முக்கியம்.  கருணாநிதி ஆணையிட்டால் அது நடந்து விடக் கூடாது என்பதற்காக மூர்க்கத் தனமாக எதிர்ப்பவர்களைப் பார்க்கிறேன்.  அதே போல், சித்திரை வேண்டாம் என்பவர்களுக்கும் இது சமஸ்கிருத வெறுப்பு, பார்ப்பன வெறுப்பு, ஜெயலலிதா மீது கடுப்பு என்பவைதான் உந்துதல்.

போகட்டும்.  ஆனால், சித்திரைப் புத்தாண்டைத் தாக்குபவர்கள் ஒரு புராணக் கதையை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு இது அறிவியலுக்குப் புறம்பானது;  பழங்குப்பை;  ஆங்கில, திருவள்ளுவர் ஆண்டுகளைப் போலத் தொடர்ந்து வராமல், சுழற்சி முறையில் வருவது முட்டாள்தனம்; என்றெல்லாம் வாதிடுகிறார்கள்.

இயற்கையின் நிலை சுழற்சி நிலைதான்.  இதுதான் முற்கால மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு.  பருவங்கள் சுழல்கின்றன.  பருவநிலையை வைத்து, வானிலையை ஓரளவு கணிக்கலாம்.  அதை வைத்துப் பருவத்தே பயிர் செய்யலாம்.  கதிரவன், கோள்கள், விண்மீன்கள், நிலவு என்று விண்ணில் மிதக்கும் உருவங்களைப் பார்த்து வருங்காலத்தை ஓரளவுக்குக் கணிக்கலாம் என்று மனிதன் கண்டு பிடித்தது மிகப்பெரும் சாதனை.

மேலைநாட்டு (ஆங்கில) ஆண்டு முறை அல்லது கிறித்தவ ஆண்டு முறை ஒன்றும் மிகப்பெரிய அறிவியல் சாதனை அல்ல.  அதிலும் எண்ணற்ற பிழைகள் இருந்தன. 1582ம் ஆண்டில் போப் கிரெகொரி ஆட்சியில்தான் பிழைகளைத் திருத்தி இன்றைய நிலையை எட்டி இருக்கிறார்கள். (http://en.wikipedia.org/wiki/Gregorian_calendar)

தமிழ் ஆண்டு முறை நிச்சயமாக வடவர்களிடமிருந்து இரவல் வாங்கியதுதான்.  இதில் ஐயம் இல்லை.  இன்றைக்கு நாம் பெரும்பாலும் கிரெகொரியன் ஆண்டு முறையைத்தானே பின்பற்றுகிறோம்.  அது எப்படி நமக்கு வசதியாக இருக்கிறதோ, அதே போல்தான் பழங்காலத் தமிழர்கள் வடவர்களிடமிருந்து ஆண்டு முறையை வாங்கிக் கொண்டார்கள்.  அநத ஆண்டுப் பெயர்களுக்கு எவரோ புராணக் கதையைக் கற்பித்ததால் மட்டும் அது அறிவியலுக்குப் புறம்பானது ஆகாது.

திருவள்ளுவர் ஆண்டு முறை என்று சொல்லும் முறையும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டது ஆகாது.  முதலில், திருவள்ளுவர் ஆண்டு முறை என்பதே 20ம் நூற்றாண்டில் படைத்ததுதான்.  இது வடவர்களின் சுழற்சி ஆண்டு முறையை மறுத்து, மேலையர்களின் தொடர்ச்சி ஆண்டு முறையைப் பின்பற்றி, திருவள்ளுவரின் பிறந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னால் என்று கணித்து, தை முதல் நாளை ஆண்டின் முதல் நாளாய்க் கொண்டு வருவது.  திருவள்ளுவர் எந்த ஆண்டு பிறந்தார் என்பதற்குச் சரியான அறிவியல் சான்றுகள் ஏதும் நம்மிடம் இல்லை.  தமிழறிஞர்களுக்கும் தெரியாது.  தற்காலத் தமிழறிஞர்கள், திருவள்ளுவரின் காலத்தைக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரை எனக் கணிக்கிறார்கள். இதை அடிப்படையாகக் கொண்டு எப்படி ஒரு ஆண்டு முறையை அறிவியலின் அடிப்படையில் அமைக்க முடியும்?  சரி, திருவள்ளுவருக்கு முன்னர், சங்கத் தமிழர்கள் எந்த ஆண்டு முறையைப் பின்பற்றினார்கள்? இந்தத் தொடராண்டு முறையின் சிக்கலே அதுதான்.  ஏதாவது ஒரு புள்ளியில் இருந்து கணக்கிட வேண்டும்.  அந்தப் புள்ளிக்கு முன்னால் என்ன என்று கேட்டால் திணற வேண்டும்.

சரி அதை விடுங்கள்.  வடவரிடமிருந்து இரவல் பெற்ற இந்து ஆண்டு முறைக்கு வருவோம்.  அது என்ன பெரிய அறிவியல் முறையில் கணித்ததா என்று கேட்டால், ஆமாம், நிச்சயமாக என்று சொல்லலாம். தமிழர்கள் பின்பற்றும் இந்து ஆண்டு முறை, சூரிய சித்தாந்தம் என்ற நூலின் அடிப்படையில் அமைந்தது.  இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு கூகிள் நூல் தொகுப்பில் கிடைக்கிறது. (http://books.google.com/books?id=bPUXKcHQw2EC&pg=PA2&dq=surya+siddhanta&hl=en&sa=X&ei=qUSHT5uwIcfniALh08CyAg&ved=0CFIQ6AEwBw#v=onepage&q=surya%20siddhanta&f=false) ஆர்வமுள்ளவர்கள் தரவிறக்கிப் படியுங்கள்.  ஆண்டு முறை வரிசையைப் பிழையில்லாமல் துல்லியமாகக் கணக்கிடுவது எளிதல்ல.  மேலை நாட்டவர்கள் 1500 ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த முறையை 1582ல்தான் திருத்தினார்கள்.  இந்து ஆண்டு முறையை வழி வகுக்கும் சூரிய சித்தாந்தம் ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் படைத்துப் பின்னர் பலர் அதைத் திருத்தி 12ம் நூற்றாண்டுக்குள் முறைப் படுத்தப் பட்டது என்கிறது விக்கிப்பீடியா (http://en.wikipedia.org/wiki/Surya_Siddhanta).

அதில் இருக்கும் குறிப்புகள் அது எழுதப்பட்ட காலத்தில் உலகின் அறிவியல் உச்சத்தைத் தொட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. காலக்கணக்கை மிகத் துல்லியமாகவே கணக்கிட்டிருக்கிறது.  அந்தக் கணக்குகள் அலுப்புத் தட்டுபவை என்பவர்களுக்கு வேறு ஒரு கொசுறு கொடுக்கலாம்.

உலகம் உருண்டையா தட்டையா என்று மேலைநாடுகள் வெகுகாலம் தடுமாறிக் கொண்டிருந்தன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  எகிப்தியர்களும், கிரேக்கர்களும் உருண்டையான உலகத்தின் சுற்றளவைப் பண்டைக்காலத்திலேயே அளவிடக் கற்றுக் கொண்டிருந்தாலும், இடைக்கால ஐரோப்பியர்களுக்கு அதெல்லாம் மறந்து விட்டிருந்தது.  உலகம் தட்டையானது என்று கிறித்தவப் பாதிரிமார்கள் கற்பித்ததை 16ம் நூற்றாண்டில் கலிலியோ பிறந்துதான் மறுதலிக்க வேண்டியிருந்தது. அப்படிச் சொன்னது தெய்வக் குற்றம் என்று கிறித்தவ மதகுரு அவரைத் தள்ளி வைத்தார்.

ஆனால், சூரிய சித்தாந்தம் கோள்களின் நிலையைப் பற்றிச் சொல்லிக் கொண்டு போகும் போது, போகிற போக்கில் பூமியின் விட்டத்தையும், சுற்றளவையும் கணக்கிடச் சூத்திரம் தருகிறது.  அதாவது பூமி உருண்டையானது என்பதை இயல்பாக எடுத்துக் கொள்கிறது. இது ஒன்றும் தெய்வக் குற்றம் இல்லை.

பூமியின் விட்டம்  = வி =
பூமியின் சுற்றளவு = சு =  வர்க்கமூலம் (_/10 * வி),

அதாவது பை என்ற மாறிலியை பத்தின் வர்க்க மூலம் அல்லது 1.3163 என்று எடை போட்டிருக்கிறார்கள்.  பிறகு, சைன், கோசைன் பட்டியல்களின் மூலம் இதை இன்னும் திருத்தி பை என்ற மாறிலி (10800/3438) அல்லது 3.14136 என்று கணக்கிட்டிருக்கிறார்கள். நீங்கள் கூகிளில் pi என்று தேடினால் 3.14159265 என்ற விடை வரும். பண்டைய இந்தியர்கள் இவ்வளவு துல்லியமாக சைன், கோசைன் பட்டியல் மட்டுமல்லாமல், பை என்ற மாறிலியையும் கணித்ததால்தான், அவர்களால் ஆண்டு முறையில் பிழை அவ்வளவாக இல்லாமல் கணக்கிட முடிந்தது.  இதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை என்று புறந்தள்ளுவது பொருத்தமற்றது.

சரி, சரி, இதெல்லாம், பாட்டி கதை.  இப்போதுதான் அணுக்கடியாரமே வந்து விட்டதே.  இன்னும் ஏன் இதைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என்று கேட்கலாம்தாம்.  இன்றைய தமிழ் ஆண்டு முறையும் இந்திய அரசின் ஆண்டு முறைக் கணக்கோடு இணங்கி அணுக்கடியாரக் கணக்கை எல்லாம் ஏற்றுக் கொண்டு பஞ்சாங்கம் பார்ப்பதுதான்!  பழைய பஞ்சாங்கத்தை விடுங்காணும்.  இந்தச் சுழற்சி முறையை ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டும், அதிலும் ஏன் விக்கிரம, சக ஆண்டு என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்று கேட்கிறீர்களா?  சரி, வடநாட்டு மன்னர்கள் பெயரில் இருக்கும் ஆண்டு முறை வேண்டாம் என்றால் விட்டு விடுங்கள்.  திருவள்ளுவர் போலச் சரியான காலம் கணக்கிட முடியாத தமிழ்ப் புலவர்களை விட்டு விட்டு, அதியமான், பாரி போன்ற தமிழ்ப் பெருவள்ளல்களின் காலக் கணக்கை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்களேன்?

அது என்ன 60 ஆண்டு சுழற்சி?  அது வியாழன் என்ற கோள் ஒரு முறை கதிரவனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்.  அதை இந்துக்கள் மட்டுமல்ல, சீனர்களும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய்ப் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.  பருவகாலம் போல், இந்தச் சுழற்சி முறையிலும் வானிலைக் குறிப்புகள் பொதிந்திருக்கின்றன.  “தாது வருஷப் பஞ்சம்” என்பது போல ஆண்டின் பெயரை வைத்து ஆண்டுப் பலன்களைச் சொல்பவர்கள், பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய்த் தொடர்ந்து நடந்து வந்திருப்பவற்றை வைத்துப் பலன் சொல்லுகிறார்களா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்தச் சுழற்சிகள், இன்னும் எத்தனை எத்தனை வட்டங்களுக்குள்ளோ, வெளியோ விரிந்து போகின்றன என்று பார்க்க வேண்டும். எல் நினோ(El Nino), லா நினா (La Nina) போன்ற பெருநீரோட்டங்கள் உலகளாவிய வானிலையைப் பாதிப்பது போல் இன்னும் என்னென்ன சுழற்சிகள் இருந்திருக்கின்றன என்று ஒப்பு நோக்க வேண்டும்.

தற்காலத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுபவர்கள் சித்திரைத் திருநாளைக் கொண்டாடிவிட்டு, மேம்போக்காகப் பலன் பார்ப்பதோடு சரி.  சுழற்சி முறை, தொடர்ச்சி முறை, என்பதை எல்லாம் வேறுபடுத்திப் பார்ப்பதெல்லாம் மறந்தாகி விட்டது.  ஆங்கில ஆண்டு முறைதாம் நம் வாழ்க்கை என்றாகி விட்டதே.  நம்மவர்கள் முறைகள் எல்லாம் மூட நம்பிக்கை என்று புறந்தள்ளுகிறோம்.  புராணக் குப்பைகளுக்குள்ளும் வைரங்கள் ஏதாவது புதைந்திருக்கின்றனவா என்று பகுத்து அறிவோமே!

கொண்டாடுபவர்களுக்கு, இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

வியாழன், ஜனவரி 19, 2012

இந்தியா ஒரு வாழைக் குடியரசா?


"தினமலர் தொடர்ந்து கூடங்குளப் போட்டங்களுக்கு எதிரான நிலையை எடுத்துவருகிறது தெரிந்ததே. (பிற மக்கள் போராட்டங்களையும் அவர்கள் கொச்சைப்படுத்தி சர்ச்சைகளுக்குள்ளாகியுள்ளனர்). எனவே தினமலரில் ‘மட்டும்‘ வரும் இத்தகைய செய்திகளை கவனத்துடன் வாசித்து அவற்றின் வரிகளுக்கிடையேயும் வாசிக்கக் கற்றுக்கொள்ளுவது அவசியம்." என்று எழுதுகிறார் சிறில் அலெக்ஸ்.

அவரது கட்டுரை (http://www.tamilpaper.net/?p=5425  ) சொல்லும் கருத்துகளை நாம் கவனிக்க வேண்டும்.


“மிக இயல்பாகவே இதுபோன்ற நிகழ்வுகளில் நாம் அதிகார பலம் பொருந்திய அரசின் பக்கம் நிற்க தலைப்படுகிறோம். ‘நாமே அரசு‘ என்பததைப் போன்றதொரு எண்ணம் நமக்குள்ளது. அதுவே, நம் அரசு தந்திரமாக வெளியிடும் இத்தகைய செய்திகளை நம்பவும் வைக்கிறது. உண்மையில் நாம் பொதுமக்களின் பக்கம் இருக்கும் நியாயங்களையும் புரிந்துகொள்ள முயலவேண்டும். இத்தகைய செய்திகளைப் பகிர்வதன் மூலம் ஒரு வீணான சந்தேகம் பரவ நாம் வழிவகுக்கிறோம். அதைவிட மேலாக இவற்றை அப்படியே நம்புவதன் மூலம் இதுபோன்ற சூழ்ச்சிகள் நிலைக்கவும், இன்னொரு தருணத்தில் நம்மையே குறிவத்து தாக்கவும் வழிவகுக்கிறோம். பல வேளைகளில் நமக்கு போதுமான தகவல்கள் கிடைப்பதில்லை என்பதும் உண்மையே. அப்படி இருக்குமேயானால் நாம் அமைதி காத்திருப்பதே நன்மை பயக்கும் என்பேன்.” என்று ஆணித்தரமாகத் தம் கட்டுரையை முடிக்கிறார்.

கூடங்குளம் போராட்டம் இந்திய வரலாற்றில், குறிப்பாகத் தமிழக வரலாற்றில் ஒரு புதிய ஏடு.

அணுசக்தி, அணுக்குண்டு, போன்ற செய்திகளில் 1960கள் முதல் இது ஏதோ மகத்தான சாதனை போன்ற ஒரு மலைப்பு மக்களுக்கு இருந்து வந்திருக்கிறது.  இந்திரா காந்தியின் ஆட்சியில் முதன்முதலாக இந்தியா அணுக்குண்டு வெடித்த போது ஏதோ ஒரு பிரம்மாஸ்திரத்தைப் பெற்று விட்டது போன்ற ஒரு பெருமகிழ்ச்சி ஏனைய மக்களைப் போலவே எனக்கும் இருந்தது.  கல்பாக்கம் அணு உலையைக் கட்டிக் கொண்டிருந்த போது, எங்கள் பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் ஏதோ புனிதத்தலத்துக்குப் போவது போல போய் வந்தேன்.  அவர்கள் அதில் என்னென்ன செய்யப் போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த போது படித்து முடித்தவுடன் இந்தியாவின் அணுசக்திக் குழுமத்தில் சேர்ந்து “தொண்டாற்ற” வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.  பட்ட மேற்படிப்புக்கு  நான் அமெரிக்கா சென்ற போது என் கல்லூரித் தோழன் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் போய்ச் சேர்ந்தான்.

நான் அமெரிக்கா சென்ற சில மாதங்களில் அணுநிலையத்தில் விபத்து பற்றிய  “சைனா சிண்ட்ரொம்” என்ற திரைப்படம் வந்தது.  அது வந்த இரண்டு வாரங்களுக்குள் அந்தப் படத்தில் காட்டிய படியே உண்மையிலேயே ஒரு அணு உலை விபத்து ஏற்பட்டது.  திரீ மைல் ஐலண்டு என்ற இடத்தில் இருந்த அணு உலை கட்டுக்கடங்காமல் போகும் என்ற பரபரப்பு (http://en.wikipedia.org/wiki/Three_Mile_Island_accident) அப்போது ஏற்பட்டது.  கல்லூரியில் எனது ஆய்வுக்கூடத்துக்குக் கீழே ஒரு ஆய்வு அணு உலையை வைத்திருந்தார்கள்.  அது அப்போது செயலிழந்த நிலையில் இருந்தது.  இருந்தாலும், திரீ மைல் ஐலண்டு வெடித்தால் நாங்கள் தப்பிச் செல்ல எங்கே போக வேண்டும் என்றெல்லாம் தொலைக்காட்சியில் அறிவிப்புகள் வந்த வண்ணம் இருந்ததால், கல்லூரி அணு உலை பற்றியும் உள்ளூர் மக்களுக்கு ஐயம் ஏற்பட்டது.  அந்த உலையால் எந்த ஆபத்தும் இல்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் பேராசிரியர்கள்.  உண்மையில் அணு உலை வெடிப்பு ஏற்பட்டால் அதைக் கட்டுப் படுத்தக் கொடுத்திருந்த அறிவும், பயிற்சியும் போதுமானதல்ல என்பது எனக்குப் பின்னால்தான் உறைத்தது.

தொழிற்சாலைகளில் விபத்துகள் நேரிடுவது பற்றிய அக்கறையும், அவற்றைத் தடுப்பது, அவற்றைக் கட்டுப் படுத்துவது, அவற்றிலிருந்து மீள்வது என்பதெல்லாம், பொறியியல் துறையிலும் ஒரு ஆழ்ந்த தனித்துறை.  விபத்துகள் நேரவே நேராது என்று நெருப்புக்கோழி போல மண்ணில் தலையைப் புதைத்து வைத்துக் கொண்டிருந்தால், ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய இயலாது.  ஒரு சாதாரண வேதித் தொழிற்சாலை விபத்துகளையே பொறுப்புடன் கட்டுப்படுத்தும் நெறிமுறைகளும், பயிற்சியும், அதற்கேற்ற எச்சரிக்கை மணிகளையும் வைத்துக் கொள்ளக் கவலைப் படாத நாடு இந்தியா.  போபால் தொழிற்சாலையில் விபத்து நேர்ந்த போது அதில் அன்று வேலை செய்து கொண்டிருந்த இளம் பொறியாளர்களில் ஒருவர் எனது வகுப்புத் தோழர்.

கல்லூரிகளில் படித்து, நாம் செய்யும் எதிலும் பிழையே இருக்காது, இருந்தாலும் அவற்றைக் கட்டுப்படுத்தும் வல்லமை நம்மிடம் உண்டு என்ற திமிர்த்தனம் பெரும் பல்கலைகளில் நன்றாகப் படித்த என்னைப் போன்ற மாணவர்களுக்கு உண்டு.  இந்த அசைக்க முடியாத நம்பிக்கையை திரீ மைல் ஐலண்டும் போபாலும் அடியோடு தகர்த்து விட்டன.

மனிதர்கள் கட்டும் எதுவும் பிழையற்றதல்ல.  மனிதர்கள் கடவுளர்களல்லர்.  அவர்களால் எல்லாவற்றையும் எதிர்பார்த்து அதற்கேற்பக் கட்டுப் படுத்த முடியவே முடியாது.  முதலில் இதை ஏற்றுக் கொள்ளும் அடக்கத் தன்மை வேண்டும்.  இந்த அடக்கத்தன்மை இல்லாமல், குறை சொல்பவர்கள் முட்டாள்கள் என்று எங்கெங்கே பொறியாளர்களும், கம்பெனிகளும், அரசுகளும் பறை சாற்றுகின்றனவோ, அங்கெல்லாம் மக்கள் கவலைப் பட வேண்டும்,  நிரம்பக் கவலைப் பட வேண்டும்.

உலைகள் பழுதாகும்.  மனிதர்கள் பிழை செய்வார்கள்.  எதிர்பாராதவை நடக்கும்.  இவற்றைக் கண் குத்திப் பாம்பு போல பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.  ஆலைகளைச் சுற்றி எண்ணற்ற வளையங்களை வைத்திருக்க வேண்டும், ஒவ்வொரு வளையத்திலும் விபத்து நடந்தால் என்ன அடையாளம் வெளியே தெரியும் என்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.  அணு ஆலைக்கு அருகே ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கிறார்கள் என்றால் அது எச்சரிக்கைகளையும் கடந்து ஏதோ நடந்திருக்கிறதா என்று தீவிரமாக ஆராய வேண்டும்.

அணு ஆலைக்கு அருகே உணவுப் பொருள்களைச் சோதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.  வளையங்களுக்கு  இடையே நுண்ணிய வேறுபாடுகள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.  மக்களுக்கு புற்று நோய் வருகிறதா, அவர்களுக்கும் ஆலைக்கும் என்ன தொடர்பு என்று பார்க்க வேண்டும்.  இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளைச் செய்பவர்கள் அணு ஆலைக்குத் தொடர்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.  ஆலைக்குள் பணியாற்றுபவர்களால் தாங்கள் செய்யும் பிழைகளை ஏற்றுக் கொள்ளவே இயலாது.  இது மனித இயல்பு.  அதிலும் அரசு நடத்தும் ஆலைகளுக்குத் தனிச்சிக்கல் என்னவென்றால் அவர்களால் என்றுமே தாங்கள் நடத்தும் ஆலைகள் நஞ்சைக் கக்குகின்றன என்று ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஆலை உரிமையாளர்கள் பெரும்பாலோரின் தன்மை.

விமானப் பறப்பின் விபத்துகள் பற்றிக் காரசாரமாக விவாதித்தார்கள் நண்பர்கள்.  அமெரிக்காவில் அரசு விமான நிறுவனங்களை நடத்துவதில்லை.  ஆனால், விமான நிலையங்களையும் விமானங்களையும் கண்காணிக்கும் பொறுப்பு காவல் துறையைப் போல அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.  இப்படிப் பொறுப்பைப் பிரித்து வைத்து பல்வேறு முறைகளில் கண்காணித்தாலும் விமான விபத்துகள் ஏற்படுகின்றன.  விபத்தின் பின் அதை ஆராய்ந்து பரிந்துரைகளைக் கொடுக்கும் துறை தனித்துறை.  இப்படி அவர்கள் கண்காணித்து வருவதால்தான் விமானப் பறப்பு ஓரளவுக்குப் பாதுகாப்பாய் இருக்கிறது.

ஆனால், அணு ஆலைகளைப் பற்றிய ஆய்வுகள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வந்து விட்டால், யாராலும் பிழைகளைக் கண்டறிந்தோ, அல்லது களைந்து திருத்தியோ செயல்பட முடியாது.  இது வரை இந்தியா கட்டியிருக்கும் அணு ஆலைகளின் முக்கிய நோக்கம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதல்ல.  அவை, இந்தியா அணுகுண்டு தயாரிக்கத் தேவையான எரிபொருள்களை உற்பத்தி செய்யும் நோக்கில்தான் கட்டப்பட்டன.  அதனால்தான், தேசியப் பாதுகாப்புச் சட்டம் அவற்றைப் பாதுகாக்கிறது.

கூடங்குளம் அப்படிப் பட்ட ஆலை அல்ல.

அதில் இருந்து கழிவுகளைக் கூட இந்தியாவால் கடத்த முடியாது.  கூடங்குளம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கென்றே உருவாக்கப் பட்ட ஆலை.  அதைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவது அதைக் கட்டியவர்களையும், அதை நடத்துபவர்களையும் பாதுகாக்கும் வெற்றுத்திட்டம்தான்.  இது போன்ற ஆலைகளை அங்கு வாழும் மக்களின் எதிர்ப்புக்கு இடையே கட்டி நடத்துவது என்பது சர்வாதிகார நாடுகளிலும், மக்களைப் பற்றிக் கவலைப் படாத முதலாளித்துவ நாடுகளின் குடியேற்றப் பகுதிகளும் மட்டுமே நடக்கும்.  மக்களாட்சி என்று பறை சாற்றிக் கொண்டே மக்களின் உரிமையை மீறுவது அவர்களது போலி முகத்திரைகளைக் கிழித்து விடும்.

இந்தியா ஆதிக்க நாடுகளுக்கு ஏவல் செய்யும் வாழைக் குடியரசா இல்லை, இந்தியர்கள் நிம்மதியாக வாழும் குடியரசா என்பது கூடங்குளத்தில் அரசுகளின் நடவடிக்கைகளில் இருந்து தெரிந்து விடும்.

ஞாயிறு, ஜனவரி 15, 2012

சென்னைப் புத்தகக் காட்சி 2012ல் இதுவரை நான் வாங்கிய நூல்கள்:

சென்னை புத்தகக் காட்சி 2012க்கு நான் இதுவரை இருமுறை சென்றாயிற்று.

முதல்முறை கையில் தூக்கி வர முடிந்தவரையில் வாங்கினேன்.  இரண்டு மணி நேர நடையில் பாதிக் காட்சி கூடப் பார்க்க முடியவில்லை.  ஆங்கிலப் பதிப்பகங்களை முழுக்க முழுக்க ஒதுக்கி விட்டேன்.  பெருவணிகப் பதிப்பகங்களில் நெரிசல் கூடுதலாக இருந்ததால் எட்டிப் பார்த்து விட்டு ஒதுங்கி விட்டேன்.  அதிலும் நான் வாங்கக் கூடிய புத்தகங்களைப் பெருநிறுவனங்கள் வெளியிடத் தயங்கலாம்.  ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைப் பதிப்பகங்களையும் எட்டிப் பார்த்தேன்.  அவற்றோடு ஒப்பிடும்போது சென்னை, மதுரை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்பகங்கள் எவ்வளவு பின் தங்கியிருக்கின்றன என்பதற்கு ஒரு அளவுகோல் வேண்டாமா?  அதுதான்.  நாம் பல நூற்றாண்டுகள் பின் தங்கியிருக்கிறோம் போலிருக்கிறது.

நல்ல ஆராய்ச்சி நூல்களைத் தக்க முறையில் பிழையில்லாமல் வெளியிட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களால்தான் முடிகிறது.  இந்திய அரசின் வெளியீடுகள் நல்ல தரத்தில் இருந்தாலும், பத்து இருபது ஆண்டுகளுக்குள் அவை நிலை குலைந்து போய் விடுகின்றன.  நான் அவர்களிடமிருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அச்சடித்த, 30-50 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட நூல்களைத்தான் வாங்க நேரிட்டது. இந்த நூல்களையும் வெளிநாட்டுப் பதிப்பகங்கள் போல் நல்ல தரமான பதிப்பில் வெளியிடும் நாள் வராதா என்று காத்திருக்க வேண்டியிருக்கிறது.

முன்னெப்போதையும் விட இப்போது படிப்பவர்களும், நூல்களைச் சொந்தமாக விலை கொடுத்து வாங்குபவர்களும் கூடியிருக்கிறார்கள்.  தமிழிலேயே உயர்ந்த விலையில் தரமான தாளில் அச்சிட்டு வெளியிடும் பதிப்பகங்கள் வந்துள்ளன.  அதனால், என் ஆசை நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இது வரை 50 நூல்களை வாங்கியுள்ளதாகப் பட்டியல் போட்டுள்ளேன்.  வீடு நிறையப் புத்தகங்களைக் குவித்து வைத்திருப்பதால், மேலும் புத்தகங்களை வாங்கிக் குவிக்கும்போது ஆராய்ச்சி மணி அடிப்பது கேட்கிறது. 

”சரி, சரி, வாங்கன புத்தகத்துல எத்தனை புத்தகத்தைப் படிச்சு முடிச்சிட்டீங்க? என்ன கேள்வி கேக்கலாமா? தேர்வுக்குத் தயாரா? எல்லோரும் அறிஞர், பொறிஞர்னு சொல்றாங்களாமே? எங்க என் டெஸ்ட்லே பாஸ் பண்ணுங்க பாப்போம்?”  என் வாழ்க்கைத்துணை நலம் அன்புடன் கேட்கிறார். :-)

”சரி, சரி, நீ இது வரை வாங்கிய துணியை எல்லாம் உடுத்துவதற்குள் நான் வாங்கிய புத்தகங்களைப் படித்து விடுவேன்!” என்று “நகைச்சுவை” ததும்ப புத்திசாலித்தனமாய்ப் பதில் சொன்னேன்.

“யோவ், இது உனக்கே ரொம்ப ஓவராய்த் தெரிய்ல?” என்று முறைத்து விட்டுக் கிளம்பினார் இல்லத்தரசியார்.

சூடு கொஞ்சம் கூடுதலாய் இருந்ததால், காப்பி போடக் கேட்கும் சமயம் இதுவல்ல என்று என் மரமண்டைக்கும் உறைத்து. :-)

சரி, சரி, உங்கள் வீட்டுச் சண்டை புராணம் அப்புறம் வைத்துக் கொள்ளலாம், என்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என்று நீங்கள் கேட்பதும் காதில் விழுகிறது.

இதோ அந்தப் பட்டியல்.

சென்னைப் புத்தகக் காட்சி 2012ல் இதுவரை நான் வாங்கிய நூல்கள்:



1. காவல் கோட்டம், சு. வெங்கடேசன், தமிழினி பதிப்பகம்
2. அ. முத்துலிங்கம் கதைகள், அ. முத்துலிங்கம், தமிழினி பதிப்பகம்
3. சிலம்பின் காலம், இராம கி., தமிழினி பதிப்பகம்
4. பண்டைத் தமிழ் எழுத்துக்கள், தி. நா. சுப்பிரமணியன், உலகத் தமிழாராய்ச்சி நிலையம்
5. தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும், புலவர் கோவேந்தன், வேமன் பதிப்பகம்
6. தமிழ் எழுத்தின் வரிவடிவம், சி கோவிந்தராசனார், உலகத் தமிழாராய்ச்சி நிலையம்
7. இராசேந்திரசோழன் வெளியிட்ட எசாலம் செப்பேடுகள், ச கிருஷ்ணமூர்த்தி, உலகத்தமிழாராய்ச்சி நிலையம்
8. சோழர் காலச் செப்பேடுகள், மு. ராஜேந்திரன், அகநி வெளியீடு
9. தமிழ்நாட்டுச் செப்பேடுகள், தொகுதிகள் 1, 2, ச கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் தமிழாய்வகம்
10. கல்வெட்டுகள் கூறும் உண்மைகள், தி வை சதாசிவ பண்டாரத்தார், மணிவாசகர் பதிப்பகம்
11. கல்வெட்டுகளில் கன்னித்தமிழ், கவிக்கோ ஞானச்செல்வன், தென்றல் நிலையம்
12. கல்லெழுத்துக்கலை, நடன காசிநாதன், மணிவாசகர் பதிப்பகம்
13. கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி, சி கோவிந்தராசன், மதுரை காமராசர் பல்கலை
14. எழுத்தியல், சூ இன்னாசி, பாரி புத்தகப் பண்ணை
15. நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும், அ தாமோதரன், (இ)க்ரியா
16. கணக்கதிகாரம், Institute of Asian Studies
17. Build your Web Home, Nayyar and Sharma, NISCOM, Govt. of India
18. உங்கள் வெப் ஹோம் உண்டாக்குங்கள், ஷர்மாவும் நைய்யரும், இந்திய அரசு
19. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், கே கே பிள்ளை, உலகத் தமிழாராய்ச்சி நிலையம்
20. தமிழ்நாட்டு வரலாறு பாண்டியப் பெருவேந்தர் காலம், தமிழ் வளர்ச்சித்துறை
21. அரங்கேற்றுகாதை ஆராய்ச்சி, வெ மு ஷாஜகான் கனி, உலகத் தமிழாராய்ச்சி நிலையம்
22. தொல்லியல் நோக்கில் காஞ்சிபுர மாவட்டம், ச கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் பதிப்பகம்
23. சிலப்பதிகார மூலமும் அடியார்க்கு நல்லாருரையும், உ.வே.சா. நூல்நிலையம்
24. பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும், உ.வே.சா. நூல்நிலையம்
25. குறுந்தொகை மூலமும் உரையும், உ.வே.சா. நூல்நிலையம்
26. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் பதிப்பகம்
27. தமிழக நாட்டுப்புறக் கட்டடக்கலை மரபு, இராசு பவுன் துரை, மெய்யப்பன் பதிப்பகம்
28. தஞ்சை இராஜராஜீஸ்வரம் விமானத் திருக்கற்றளி கட்டடக்கலை மரபு, இராசு பவுன் துரை, மெய்யப்பன் பதிப்பகம்
29. தமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம், நடன காசிநாதன், மெய்யப்பன் பதிப்பகம்
30. சமணத்தடயம் (தொகுப்பு), பதிப்பாசிரியர்கள் நடன காசிநாதன், மா சந்திரமூர்த்தி, மணிவாசகர் பதிப்பகம்
31. நடுநாட்டுச் சமணக்கோயில்கள், த ரமேஷ், மெய்யப்பன் பதிப்பகம்
32. தமிழில் சொல்லாக்கம், ச இராசேந்திரன், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை
33. சங்கு, ந அதியமான், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை
34. நிகமம், அதியமான், துளசேந்திரன், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை
35. A Glossary of Standardized Technical Terms in Linguistics English-Tamil, Rangan & Chandrasekaran, Tamil University, Thanjavur
36. Tamil Cultural Connections across the world, V Selvakumar, Tamil University, Thanjavur
37. ஊழிக்கூத்து, வெளி ரங்கராஜன், ஆழி பதிப்பகம்
38. காண முடியாக் கனவு, ரவிக்குமார், ஆழி பதிப்பகம்
39. எனது ஊர் நூல்வரிசை - வேலூர், மா குணசேகரன், ஆழி பதிப்பகம்
40. ஆங்கிலம் - தமிழ் சொற்களஞ்சியம், சிதம்பரநாதன் செட்டியார், சென்னைப் பல்கலைக்கழகம்
41. Devadasi System in Medieval Tamil Nadu, K Sadasivan, அகநி வெளியீடு
42. Foreign Notices of South India, K A Nilakanta Sastri, University of  Madras
43. சி என் அண்ணாதுரை - நவபாரதச் சிற்பிகள் தொடர், பி. சி. கணேசன், பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்,  இந்திய அரசு
44. Ajanta Murals, Ed. Ghosh, Ph. Tiwari, Arch. Survey of India, 1996
45. South Indian Paintings, C Sivaramamurti, Publications Division,  Government of India, 1994
46. Some Aspects of Indian Culture, C Sivaramamurti, Publications Division,  GoI, 1994
47. Vijayanara Paintings, C Sivaramamurti, Publications Division, GoI, 1985
48. Guler Painting, Randhawa and Randhawa, Publications Division, GoI, 1982
49. Kangra Paintings on Love, Randhawa, Publications Division, GoI, 1994
50. பாலாவின் அரசியல் கருத்துப்படங்கள், கார்ட்டூனிஸ்ட் பாலா, குமுதம் பதிப்பகம்