வெள்ளி, பிப்ரவரி 08, 2013

கடவுளும் கேட்டசாமியும்

கடவுளும் கேட்டசாமியும்

முகநூலில் என் இளைய நண்பர் கொற்றவன், சித்தார்த்த கௌதமனைப்போல் ஒரு தேடலைத் தொடங்கியிருக்கிறார். இந்தச் சிறிய வயதில் அவருக்குத் திடீரென்று இறப்பைப் பற்றிய எண்ணம் வந்து அச்சுறுத்துகிறது.  பிறந்தவர்கள் எல்லோரும் இறந்து விடுகிறார்களே, அப்படியானால் நாமும், நம் உற்றார் உறவினரும் நண்பர்களும் எப்போது வேண்டுமானால் இறந்து போகலாமே என்ற அச்சத்தில் இறப்பைப் பற்றிப் புரிந்து கொள்ள அவர் தேடத் தொடங்கியிருக்கிறார்.

அவ்வப்போது இந்தத் தேடலின் தொடர்பாக அவர் தனி மடலிலும் முகநூல் நிலைச்செய்திகளிலும் வினாக்களை எழுப்புவார்.  அவரது தேடல் சித்தார்த்த கௌதமனைப் போல அவரைப் போதிமரத்தின் நிழலுக்கு அழைத்துச் செல்லப் போகிறதா என்று நான் அறியேன்.  திடீரென்று ஒரு நாள், ராமகிருஷ்ணரை நரேந்திரரைக் கேட்டது போல் என்னிடம் நீங்கள் கடவுளை உணர்ந்ததுண்டா எனக் கேட்டு விட்டார்.  நான் என்ன பரமஹம்சரா என்ன இதற்கு விடையளிக்க? திருதிருவென்று விழித்தேன்.  அவரும் விடாக்கண்டர்.  நீர் கோவிலுக்குச் சென்று வழிபடுபவராயிற்றே, கடவுளை நம்புபவர்தாமே?  நீங்கள் கடவுளை உணர்ந்ததுண்டா என்றார்?

இது சிக்கலான கேள்வி.

நான் உணர்ந்ததுதான் கடவுள் என்று என்னால் எப்படிச் சொல்ல முடியும்?

பகுத்தறிவோடு என்னால் விளக்கமுடியாதவற்றை நான் உணர்ந்திருக்கிறேன் என்பது உண்மைதான்.  ஆனால், அதுதான் கடவுளா என்று எனக்கு உண்மையிலேயே தெரியாது.  ஆனால், அந்த நேரத்தில் நான் கடவுளை உணர்ந்ததாகத்தான் நம்பினேன் என்பது என்னவோ உண்மைதான்.

இன்று திடீரென்று இறப்பைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் கேள்விக்கணைகளாய்த் தொடுத்துவிட்டார்.  எனக்குத் தோன்றிய விடைகளைப் பதிவு செய்து பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.  இதோ அவரது கேள்விகளுக்கு என் விடைகள்.

கே: நாம் ஏன் பிறந்தோம்?
வி: நாம் எல்லா உயிரினங்களையும் போலவே இனப்பெருக்கத்துக்காகப் பிறந்தோம்.

கே: நாம் ஏன் இறக்க வேண்டும்?
வி: வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதிப்படி, நம்முடைய உடலில் உள்ள அணுக்கள் சிதையத் தொடங்குகின்றன. ஒரு குறிப்பிட வரம்பை மீறிய பின்னால் இந்த உடலால் பயனொன்றும் இல்லை.  பழங்காலத்தில் அது ஒரிரு குழந்தைகளைப் பெற்று அவற்றை ஆளாக்கி விட்டபின் போதுமாக இருந்தது.  நமக்கு 30 வயதில் அடுத்த தலைமுறை இனப்பெருக்கத்துக்கு ஆயத்தமாகிவிடும். 45 வயதில், இரண்டு தலைமுறைகள் ஆயத்தமாகியிருக்கும்.  அதற்குப் பின் இயற்கையைப் பொருத்தவரையில் நம்மால் பயனில்லை. எல்லா நோய்களும் 45 வயதுக்கு அப்புறம் கடுமையாகத் தாக்குகின்றன.

கே: நாம் ஏன் இறக்க அஞ்சுகிறோம்?
வி: எல்லா உயிரினங்களும் தம்மைக் காத்துக் கொள்ளவே விரும்புகின்றன.  இந்த அடிப்படை தெரியாத உயிர்கள், டார்வினின் கோட்பாட்டின்படி, அழிந்து விடுகின்றன. அச்சம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள உதவுகிறது.

கே: இறப்பு எப்படி இருக்கும்?
வி: இதற்கு வள்ளுவர் விடையளித்திருக்கிறார்.  இறப்பு தூங்குவது போல் இருக்கும்.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (குறள் 339).


கே: இறந்த பின் எப்படி இருக்கும்? 
வி: ஒன்றும் இருக்காது.

கே: இறந்தபின் நாம் என்ன ஆவோம்?
வி: ஆவதற்கு ஒன்றும் இல்லை.  உறக்கத்துக்குப் பின் விழிப்பது நாம் இல்லை.  இந்தப் பிறப்பின் கதை முடிந்து விட்டது.  நம் உடலில் இருக்கும் பல்லாயிரம் கோடி உயிர்கள் வேறு எங்கோ போயிருக்கும்.  இந்த உடலின் அணுக்கள் சிதைந்திருக்கும். இந்த முகிழ்ப்பு நிறைவேறிவிட்டது.  முந்தைய முகிழ்ப்பு வேறு யாரோ.  வரும் முகிழ்ப்பும் வேறு யாரோ. அவை நம்முடன் தொடர்பில்லாதவை.

கே: கடவுள் என்று ஒன்று உண்டா?
வி: இந்தப் பேரண்டம்தான் கடவுள்.

கே: அப்படியானால் ஏன் அந்தக்கடவுள் நம்மை படைத்து அழிக்கவேண்டும்?
வி: கம்பராமாயணம் பாயிரம் இதற்கு விடையளிக்கிறது.

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையான் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே 

           
அலகிலா விளையாட்டு.  அவ்வளவே.  தில்லைக் கூத்தர் ஏன் ஆடுகிறார்?  இந்த அண்டங்களும், அணுக்குள் இருக்கும் துகள்களும் ஏன் ஆடிக் கொண்டிருக்கின்றன.  அலகிலா விளையாட்டு.  ஆக்கலும் அழித்தலும் இந்த விளையாட்டில் ஒரு பங்கு.  அவ்வளவே.

கே: கடவுள் எப்படி உருவானார்?
வி: அவர் உருவாகவில்லை.  என்றும் இருப்பவர்.

கே: ஒரு வேளை கடவுள் இல்லை என்றால் அறிவியலில் கூறப்படும் பெருவெடிப்பிற்கு [Big bang] முன் என்ன இருந்தது!!
வி: அதுதான் கடவுள்.

உடனே என் “அக்கினிக்குஞ்சு” நாடகத்தில் பாரதியின் புதுமைப்பெண் பாத்திரத்தில் நடித்த கௌரி ஒரு பிடி பிடித்தார்.

”அப்படியானால் கடவுள் இருக்கிறார் என்று ஏற்றுக் கொள்கிறீர்கள்தானே!  நல்லது” என்றார் அவர்.

இதற்கு என்ன விடை?

Well, in each and every human body, there are billions of life forms (mostly bacteria) that are almost certainly not aware of their host. It doesn't matter whether they "believe" in us or whether we respond to their "prayers." It is in our interest to keep our body healthy and that is sufficient to meet the needs of these parasitical life forms. All parts of the universe, including us, are like that. The universe may not "know" or "care" that we exist and we can never fully comprehend the universe.

Is the universe sentient?
I think that Vishwaroopam is unknowable and incomprehensible.
I think that universe(s) are eternal. And that is my definition of God.

Do prayers work?
It is too random to draw a definite conclusion, but perhaps not.

Does meditation work?
Probably.

Does it "prove" that God exists?
No. But I don't think that a personal God, vengeful of those that deny him, an account keeper who punishes the evil and rewards the good, exists. To imagine a God with human frailties, with anger and love, vengefulness and compassion, is comforting but very anthropomorphic.  The universe seems to be indifferent to us. Why would it care to "judge" us or "punish" us or "reward" us?  But our actions, mostly, have consequences.

தீதும் நன்றும் பிறர்தர வாரா!

What does that make me? Theist or Agnost or an Atheist? :-)

7 கருத்துகள்:

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

The complex relationships between humans and bacteria are fascinating. Many are (at first) horrified to learn that the average person possesses over 100 TRILLION bacteria (including perhaps a billion or more E.Coli) in and on our bodies.

http://www.scientificamerican.com/article.cfm?id=ultimate-social-network-bacteria-protects-health

Unknown சொன்னது…

அன்பின் மணி:
சிக்கலான கேள்விகள். உறுதிப்படுத்த முடியாத ஊகங்களே/உணர்வுகளே பதிலாக அமையும்.

"What does that make me? Theist or Agnost or an Atheist? :-) "

--Perhaps a Deist.

அன்புடன்,
குமார்

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

மிக்க நன்றி குமார். Deist பொருந்துகிறது என நினைக்கிறேன்.

ssk சொன்னது…

நன்று .. இனபெருக்கம் நிகழ்ந்தபின் உயிர் இங்கே இருக்க தேவையில்லை என்பது ..
எங்கு போய் எப்போது முடியுமோ இந்த தொடர் சங்கிலி .. நாம் ஒரு கண்ணி மட்டுமே. ஒரு செடியின் வாழ்விற்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.
ஆனால் இறப்பதற்கு பயம் அங்கு ஏற்படும் வலி .. இன்றைய அரசியல் சட்டங்களே வலி என்ற ஒன்றின் அடிப்படையில் இயங்குகின்றன .

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

திரு SSK, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எல்லா இறப்புகளிலும் வலி இருக்குமா என்று தெரியவில்லை. சிலர் இறக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியோடோ அல்லது மலைப்போடோ இறக்கிறார்கள். இறப்புக்கு முன்னதான நோயிலிருந்து விடுபடுபவர்களுக்கு அப்படித்தான் இருந்திருக்கும். ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் இறக்கும் போது சொன்னதாகச் சொல்லப்படும் சொற்களின் பொருள் என்னவோ?

http://www.thestar.com/business/2011/10/31/the_repeated_last_words_of_steve_jobs.html

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

”On his deathbed, Apple founder Steve Jobs stared into the future as he had so many times in life and uttered these final words, “Oh wow, oh wow, oh wow.”
His finals moments were captured by the late Apple CEO’s sister Mona Simpson in her eulogy that was provided to the New York Times.
No one will know for sure if Jobs has suddenly had another great idea as he passed on or was commenting on where he was about to go.
Simpson said Jobs’ laboured breath “indicated an arduous journey, some steep path, altitude.””

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

http://www.nytimes.com/2011/10/30/opinion/mona-simpsons-eulogy-for-steve-jobs.html?_r=3&pagewanted=1&sq=steve%20jobs