tag:blogger.com,1999:blog-5580246.post362123302232009078..comments2023-03-25T04:10:44.427-07:00Comments on புழைக்கடைப் பக்கம்: என் வாக்கைப் பெற விரும்பும் தமிழ் வேட்பாளருக்கான குறைந்த அளவு தகுதிகள்மணி மு. மணிவண்ணன்http://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5580246.post-37039339020422297122011-10-25T19:34:25.099-07:002011-10-25T19:34:25.099-07:00சிறப்பான கருத்துரைகள்..... இதெல்லாம் எப்போது நடைபெ...சிறப்பான கருத்துரைகள்..... இதெல்லாம் எப்போது நடைபெறும் என அறிய ஆவல் :)செல்வமுரளிhttps://www.blogger.com/profile/12256842686545952510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-25326593010169082422010-09-18T21:44:14.914-07:002010-09-18T21:44:14.914-07:00வேட்பாளருக்கான தகுதியை ஆயும் அதே நேரத்தில் - வாக்க...வேட்பாளருக்கான தகுதியை ஆயும் அதே நேரத்தில் - வாக்கைச் செலுத்தும் குடிகளுக்கான கடமைகளையும் பட்டியலிட வேண்டுகிறேன். உதாரணங்கள் :<br />(1) வரியை ஒழுங்காக செலுத்துகிறோமா ? இல்லையா ?<br />(2) வாக்கிற்காக பரிசுகளை பெறுகிறோமா, இல்லையா ?<br />(3) சாதி, மத சார்புடன் வேட்பாளரை தேர்வு செய்கிறோமா, இல்லையா ?<br /><br />அரசியல் தலைவர்களும் பிரதிநிதிகளும் குடிமக்களின் பிம்பமே !Yazhinihttps://www.blogger.com/profile/11932741951453573708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-68040740802287533222010-09-06T22:13:55.737-07:002010-09-06T22:13:55.737-07:00தருமி எழுதினார்:
/* நம்மூரில் அரசியல் ஒரு தொழிலாக...தருமி எழுதினார்:<br /><br />/* நம்மூரில் அரசியல் ஒரு தொழிலாக ஆகிவிட்டது. அதன் மூலம் அவர்கள் "ஈட்டும்" காசு, ஊழலால் வந்தது என்று தெரிந்தால் அந்த சொத்துகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் - இப்படி ஒரு சட்டம் வந்தால் ஏதாவது பயனிருக்கலாம். */<br /><br />இப்படி ஏற்கனவே சட்டங்கள் இருக்கின்றன. ஊழல் செய்ததை நீதி மன்றத்தில் உறுதி செய்ய முடியும் என்றால் சிறைக்குச் செல்வதோடு, சொத்துக்களும் பறிமுதலாகலாம். ஆனால், ஊழல் செய்தார் என்று உறுதி செய்வது மிகக் கடினம். அதனால்தான், ஒருவரது சொத்து 25%க்கு மேல் கூடினால், அதற்கு 95% வீதம் வரி என்ற விதியைக் கூட்டினேன்.<br /><br />அமெரிக்காவில், குடியரசுத் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளின் சொத்துக்களை, பதவி ஏற்பதற்கு முன்னால் “கண் மறைவுக் கட்டளை” (blind trust)யிடம் ஒப்படைத்து விடுவார்கள். பதவியில் இருந்து இறங்கும் வரை, அவர்கள் சொத்துக்களை மேற்பார்வையிடுவது அந்தக் கட்டளைகளே.<br /><br />அதிலும் சிலர் ஊழல் செய்து மாட்டிக் கொள்வதும் உண்டு. ( பார்க்க: http://www.legalaffairs.org/issues/January-February-2006/toa_costa_janfeb06.msp ). எத்தனை வேலிகள் போட்டாலும் அவற்றை மீறி ஆதாயம் தேடுவது மனித இயல்பு. எனவே கூடுமானவரை, தேன் பிழிபவன் புறங்கையை நக்குவதைக் கட்டுப் படுத்தாலாம், தேனையே திருடுவதை மன்னிக்கக் கூடாது.மணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-33559385223769399802010-09-06T21:40:05.759-07:002010-09-06T21:40:05.759-07:00நம்மூரில் அரசியல் ஒரு தொழிலாக ஆகிவிட்டது. அதன் மூல...நம்மூரில் அரசியல் ஒரு தொழிலாக ஆகிவிட்டது. அதன் மூலம் அவர்கள் "ஈட்டும்" காசு, ஊழலால் வந்தது என்று தெரிந்தால் அந்த சொத்துகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் - இப்படி ஒரு சட்டம் வந்தால் ஏதாவது பயனிருக்கலாம்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-57229366718338487372010-09-06T08:59:29.572-07:002010-09-06T08:59:29.572-07:00நான் தந்த தகுதிப்பட்டியலில்
//டாக்டர், எஞ்சினியர்...நான் தந்த தகுதிப்பட்டியலில்<br /><br />//டாக்டர், எஞ்சினியர், லாயர், புரொபசர் என்ற பட்டங்களை எல்லாம் இருந்தாலும் விளம்பரப் படுத்திக் கொள்ளக் கூடாது. அரசியலில் ஆய்வுப் பட்டம் பெற்றிருந்தாலும் கூட அதை விளம்பரப் படுத்தக் கூடாது// என்ற தகுதி ஏன் தேவை என்று ராபின் கேட்டார்.<br /><br />ஏனென்றால் அவை வேறு பதவிகளுக்கான தகுதிகள். சட்ட மன்ற உறுப்பினராக மருத்துவராய் இருந்தால் என்ன நுட்பியலாளராக இருந்தால் என்ன? வழக்குரைஞர்களுக்குச் சட்டம் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்றாலும், மக்களுக்காக வாதாடும் வல்லமை இருக்கலாம் என்றாலும், ஏனைய தொழில்களை விட வழக்குரைஞர் தொழில் மக்களின் பிரதிநிதியாக சிறப்புத் தகுதி என்று கூறுவதற்கு வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லை.<br /><br />மக்கள் உரிமைகளுக்காக வழக்கு மன்றத்தில் போராடியவர்கள் அந்தச் செய்ல்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். வெறும் டாக்டர் கேப்டன் கலைஞர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் என்று பட்டங்களை அடுக்கிக் கொள்வதால் ஒருவர் நல்ல வேட்பாளராகி விடுகிறார் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.<br /><br />எந்தப் பட்டங்களும் இல்லாமல், தனி மனிதனாக, தன் மனதைத் திறந்து மக்களுக்காக வாதாடும் திறனோடு, தன் கொள்கைகளை விளக்கிச் சொல்லும் வேட்பாளரே என் வாக்கை ஈர்க்கிறார்.மணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-26985252278648577102010-09-06T08:04:24.563-07:002010-09-06T08:04:24.563-07:00//டாக்டர், எஞ்சினியர், லாயர், புரொபசர் என்ற பட்டங்...//டாக்டர், எஞ்சினியர், லாயர், புரொபசர் என்ற பட்டங்களை எல்லாம் இருந்தாலும் விளம்பரப் படுத்திக் கொள்ளக் கூடாது. அரசியலில் ஆய்வுப் பட்டம் பெற்றிருந்தாலும் கூட அதை விளம்பரப் படுத்தக் கூடாது// Why?Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-46861833971295984342010-09-06T00:55:02.114-07:002010-09-06T00:55:02.114-07:00இதை விடப் பெரிய கனவெல்லாம் நிறைவேறியிருக்கிறதே! ஆங...இதை விடப் பெரிய கனவெல்லாம் நிறைவேறியிருக்கிறதே! ஆங்கிலேயர் ஆட்சி அஸ்தமிக்காது என்றனர். இந்தியா என்றென்றும் ஏழை நாடாகவே இருக்கும் என்றனர்.<br /><br />இதை நான் கனா என்றே கருதவில்லை. தற்போது நடப்பதுதான் நாடகக் காட்சிகள். அரசியலை திரைப்படங்கள் போல சந்தைப் படுத்தல். அரசியலையும் திரைத்தொழில் போல் ஒளிவு மறைவாக தொழில் போலச் செய்து பொருளீட்டுதல்.<br /><br />ஆனால், இந்த “தொழில்” எல்லை கடந்து விட்டது. ஒரு முதல்நிலைப் பள்ளி ஆசிரியர் வேலை கிடைப்பதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றால், அந்த ஆசிரியரால் எப்படி நேர்மையாக வாழ முடியும்? பல்கலைத் துணைவேந்தர் பதவிகளைக் கோடிகளுக்கு ஏலம் விட்டால், அந்தப் பல்கலைகள் எப்படி உருப்படும்? வெளிநாட்டுக்காரன் தமிழகப் பல்கலைகளை ஏற்றுக் கொள்ளும்வரைதானே இந்தத் திமிர்? படிக்காமல் பட்டம் பெற்ற டாக்டர் பெருந்தலைகளுக்கு மருத்துவம் பார்ப்பதிலும் நாடகம் நடத்துவதை இவர்கள் புரிந்து கொள்வதில்லையா?<br /><br />தலைகீழ் மாற்றப் புள்ளியை (tipping point) நெருங்கிக் கொண்டிருக்கிறோம். கண் இருப்பவர் காணக் கடவர்.மணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-83833121715192650542010-09-05T21:58:28.931-07:002010-09-05T21:58:28.931-07:00கனாக் காலம்..கனாக் காலம்..ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-77407979894743433942010-09-05T15:28:34.025-07:002010-09-05T15:28:34.025-07:00தேவ் அவர்களுக்கு என் மறுமொழி:
அன்புள்ள தேவ்,
ஒவ...தேவ் அவர்களுக்கு என் மறுமொழி:<br /><br />அன்புள்ள தேவ், <br /><br />ஒவ்வொரு காலக்கட்டத்திலும், மக்கள் நடத்தைக்கேற்ற விதிமுறைகளை <br />உருவாக்குவது இயல்புதானே. <br /><br /><br />நீங்கள் புகழ்பெற்ற உத்திரமேரூர் குடவோலைக் கல்வெட்டைப் பற்றிச் <br />சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். இரா. நாகசாமி அவர்களின் கட்டுரைத் <br />தொகுப்பில் இதைப் பற்றி எழுதியிருந்தார். <br /><br /><br />http://tamilartsacademy.com/journals/volume1/articles/judges_tenure.html <br />http://www.hindu.com/fr/2003/10/10/stories/2003101001421200.htm <br /><br /><br />வரலாறு.காம் தளத்தில் கமலக்கண்ணன், தமிழ்க் கல்வெட்டுச் சொற்றொடர்களை <br />நேரடியாகவே எடுத்து எழுதியிருந்தார்: <br /><br /><br />http://www.varalaaru.com/default.asp?articleid=334 <br /><br /><br />1. குறிப்பிட்ட அளவு நிலம் வைத்திருப்பவர்கள் <br />2. சொந்த வீட்டில் குடியிருப்பவர்கள் <br />3. முப்பதிலிருந்து அறுபது வயதுக்குட்பட்டவர்கள் <br />4. வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றவர்கள் <br />5. உடல்வலிமையும் உள்ளவலிமையும் உள்ளவர்கள் <br />6. இதுவரை வாரியத்தலைவராக இருந்திராதவர் <br />7. அவ்வாறு வாரியம் செய்தவர்களுக்கு உறவினராக அல்லாதவர் <br /><br /><br />நில உடமைச் சமுதாயத்தின் தோற்றம் அது என்பதால், நில உடமையாளர்களுக்கே <br />வாக்குரிமை அளித்திருந்தது. செல்வச் செழிப்புள்ள மேலை நாடுகளில் கூடத் <br />தொடக்கத்தில் அப்படிப் பட்ட கருத்தை வலியுறுத்தியிருந்தாலும் (இப்போதும் <br />பழமைவாதிகள் அவ்வப்போது முணுமுணுத்தாலும்), பொது வாக்குரிமை என்பது <br />இப்போது ஏற்றுக் கொண்ட கருத்து. வெறும் 5000 ரூபாய் கொடுத்து நில <br />உடமையாளர்களை வாங்க முடியாது என்பது உண்மைதான் என்றாலும், அப்படிக் <br />கொடுப்பது குற்றம் வாங்குவது தவறு என்பதை நிலைநாட்ட முடியாத நாட்டில் <br />இப்படிக் கட்டளைகளை வலியுறுத்த வேண்டியது படித்தவர்கள் கடமையல்லவா? <br /><br /><br />வேத சாஸ்திரம் படித்தவர்கள் மட்டும்தான் ஆள உரிமையுள்ளவர்கள் என்பதும் <br />இப்படிப் பட்ட ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாடுதான். எழுதப் படிக்கத் <br />தெரிந்தவர்கள் பெரும்பாலோராக இருக்கும் தற்காலத்தில் ஆள்வோருக்கு நல்ல <br />கல்வி தேவை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. அது மதம் தொடர்பாக மட்டும் <br />இல்லாத வரையில். <br /><br /><br />மற்ற குறிப்புகள் அன்றும் இன்று போலவே ஊழல்கள் மலிந்திருக்க வேண்டும் <br />என்பதை உணர்த்துகிறதாகவே எடுத்துக் கொள்கிறேனே ஒழிய, அதை ஒரு பொற்காலம் <br />என்று போற்றத் தயங்குகிறேன். <br /><br /><br />என்னுடைய “26 கட்டளைகள்” எனது முப்பதாண்டு கால அமெரிக்க வாழ்வின் <br />அடிப்படையில் தோன்றிய எண்ணங்கள். மூன்றாம் உலகத்திலிருந்து முதல் உலக <br />வாழ்வுக்கு முன்னேறத் துடிக்கும் இந்தியா, மூன்றாந்தர ஆட்சி முறைகளைக் <br />குப்பைக் கூடையில் போட்டு விட்டு அடுத்த நிலைக்கு உயர வேண்டும். இன்னும் <br />தத்தம் குடிகளுக்குள்ளேயே பார்த்துக் கொண்டு என் ஜாதிக்காரன் மட்டுமே <br />என்னைக் காப்பாற்றுவான் என்று கருதும் பிற்போக்குத் தனத்தை <br />விட்டொழிக்கும் வரை, இந்த நாடு முன்னேறவே வாய்ப்பில்லை. <br /><br /><br />“விதியே, விதியே, தமிழச்சாதியை என்செயக் கருதியிருக்கின்றாயடா” என்று <br />பாரதி போல் புலம்ப வேண்டியிருக்கிறது. ஆனால், இது தமிழ்நாட்டை மட்டும் <br />பிடித்திருக்கின்ற பீடை இல்லை. தென்னாசியா எங்கும் உள்ள, ஏன் ஆசியா <br />முற்றும் பரவியுள்ள நோய். <br /><br /><br />தாய்லாந்தையும், இந்தோநேசியாவையும், பிலிப்பைன்சையும், வங்கதேசத்தையும், <br />நேபாளத்தையும், வடகொரியாவையும், ஏன் ஜப்பானையும், தாய்வானையும் <br />பார்த்தால் எங்கும் இதே குழப்பத்தைத்தான் பார்க்கிறேன். குளிர்நாடுகளில் <br />உள்ள நாகரீகத்தை வெப்பநாடுகளில் ஏன் பார்க்க முடிவதில்லை என்று <br />புரியவில்லை. <br /><br /><br />உலகின் மூத்த நாகரீக நாடுகளான எகிப்து, இராக், இரான், கிரேக்கம், <br />இத்தாலி, சீனா, அகண்ட பாரதம், என்று எவற்றிலுமே அரசியல் நாகரீகத்தைப் <br />பார்க்க முடியவில்லையே என்று பொருமத்தான் முடிகிறது. <br /><br /><br />பராந்தகச் சோழனின் பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டு, இந்தப் பழம்பெரும் <br />பூமி வரலாறு கற்றுத்தந்த பாடங்களை மறந்து விட்டக் கற்றுக் குட்டியாய் <br />வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறது என்பதைக் காட்டும் அடையாளமாகக் <br />காண்கிறேன். <br /><br /><br />இருப்பினும், இந்த மாற்றங்கள் தேவை. இவை காலத்தின் கட்டாயம். <br />முன்னேற்றத்துக்குத் தடையாய் நிற்பவை தவிடு பொடியாகும். என்னுடைய கவலை <br />எல்லாம் இந்தப் பழங்குடிப் பண்ணையார்கள் புதுப்பணக்காரர்கள், பன்னாட்டு <br />முதலாளிகளோடு கூட்டமைத்து, தென்னமெரிக்காவைப் போல நம்மைப் பதினெட்டாம் <br />நூற்றாண்டுக்குப் பின் தள்ளி விடுவார்களோ என்பதே.மணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-11050983607161924492010-09-05T15:27:56.147-07:002010-09-05T15:27:56.147-07:00மின் தமிழ் மடற்குழுவில் தேவ் அவர்களின் கருத்து:
F...மின் தமிழ் மடற்குழுவில் தேவ் அவர்களின் கருத்து: <br />From: Dhivakar <br />Date: Sep 5, 10:26 am<br />To: மின்தமிழ்<br /><br /><br />மணிவண்ணன்,<br />உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமோ தெரியாதோ, யாம் அறியோம்.<br />நீங்கள் சொன்ன அத்தனை ‘கண்டிஷன்’களும் சோழ மன்னன் பராந்தகன் (10ஆம்<br />நுற்றாண்டில்) கல்வெட்டுப்பதிவாக - (அந்தக் காலகட்டத்திற்கேற்றவாறு)<br />இருந்தன. இன்னும் சில விஷய்ங்களும் கூடவே இருந்தன.<br /><br />1. வேட்பாளர் ஒருமுறைதான் ஊர்த்தலைவர் பதவிக்குப் போட்டியிடவேண்டும்<br />2. போட்டியிடும் வேட்பாளரின் உறவினர் முந்தைய ஆண்டுகளில் இந்தப் பதவியில்<br />இருந்திருக்கக்கூடாது.<br /><br />சபாஷ் போடத் தோன்றுகிறது இல்லையா..<br /><br />ஆனால் அது ஒரு கனாக் காலம்..<br /><br />அன்புடன்<br />திவாகர்மணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-72720347073980945282010-09-04T23:34:08.265-07:002010-09-04T23:34:08.265-07:00ரவி, உங்கள் யேல் பல்கலை நண்பருடன் தொடர்பு ஏற்படுத...ரவி, உங்கள் யேல் பல்கலை நண்பருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இந்தப் பயிற்சிப் பள்ளி பற்றி அவரிடம் பேசிப் பார்க்க வேண்டும். எனக்கென்னவோ, இருப்பதைக் குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட, அடுத்த தலைமுறைக்கு விதை போட்டால் பயனிருக்கும் என்று தோன்றுகிறது.<br /><br />பழமைபேசியும், நீங்களும், நகைச்சுவையாகச் சொன்னாலும், நாம் வாழும் உலகில் முதல் உலக நாடுகளின் அரசியல் தலைமையோடு ஒப்பிடும் அளவுக்காவது தமிழ்நாட்டில் அரசியல் இருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் உங்களுக்குள்ளும் இருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.மணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-90108613606649288952010-09-04T23:30:41.878-07:002010-09-04T23:30:41.878-07:00முதல் உலகத்துக்கு வரத்துடிக்கும் இந்தியா மூன்றாம் ...முதல் உலகத்துக்கு வரத்துடிக்கும் இந்தியா மூன்றாம் உலக மூன்றாம் தர அரசியலை இன்னும் எத்தனை ஆண்டுகள் தாளித்துக் கொண்டிருக்க முடியும்? தகுதியற்றவர்கள் ஆட்சியில் நாடு எப்படி முன்னேற முடியும்? நாம் வாழ்வில் எல்லா சேவைகளிலும் தரத்தை எதிர்பார்க்கும்போது நம்மை ஆள்வோர்க்கு ஆளத் தகுதி இருக்க வேண்டும் என்பதில் என்ன தவறு?<br /><br />எல்லா அரசியல் இயக்கங்களும் தமிழ்நாட்டில் நீர்த்துப் போனவை. விஜயகாந்த், சீமான் போன்ற திரைத்தாரகைகளிடம் பணமும் கவர்ச்சியும் இருக்கும் வரை அவர்களைச் சுற்றியும் சிலர் கூடலாம். ஆனால் அவர்களும் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமைக்குக் ஏற்றவர்கள் இல்லை.<br /><br />ஒரு புது அரசியல் தலைமைக்குத் தமிழகம் காத்து நிற்கிறது. அப்படிப் பட்ட தலைமை தோன்றுவது காலத்தின் கட்டாயம். பேரரசுகள் தோன்றி மடிவது போல, அரசியல் இயக்கங்கள் நீர்த்துப் போவது போல, தமிழகத்திலும் திராவிட அலை ஓய்ந்து கொண்டிருக்கிறது.<br /><br />இனிமேல் தி.மு.க. பணம் படைத்த ஒரு குடும்பக் கட்சி, அவ்வளவே. அதன் எதிரிக்கட்சிகளும், எதிர்க்கட்சிகளும், அதன் நீர்த்துப் போன படிகள். பணம் சில காலம் வெல்லும். ஆனால், கொள்கைகள் எல்லாவற்றையுமே விற்றுப் பிழைக்கும் எந்த இயக்கமும் தொடர வாய்ப்பே இல்லை.மணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-83313719581048115092010-09-04T18:45:54.650-07:002010-09-04T18:45:54.650-07:00//பழமைபேசி said...
வணக்கம்; தங்களுக்கு இந்தியாவில்...//பழமைபேசி said...<br />வணக்கம்; தங்களுக்கு இந்தியாவில் வாக்கு அளிக்கும் வாய்ப்பு என்றுமே அமையாது போலிருக்கே??<br />//<br /><br />வழிமொழிகிறேன்:)<br /><br />யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணிபுரியும் என் கல்லூரி வகுப்புத்தோழன் இரண்டு வார பயிற்சிக்கு வரும் இந்திய அரசியல்வாதிகளுக்கு தற்போது வகுப்பு எடுக்கிறான். பயிற்சி பள்ளிக்கு அவனிடமிருந்து நல்ல போசனைகள் கிடைக்கும்.....Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-28846618988624871442010-09-04T16:51:44.897-07:002010-09-04T16:51:44.897-07:00வணக்கம்; தங்களுக்கு இந்தியாவில் வாக்கு அளிக்கும் வ...வணக்கம்; தங்களுக்கு இந்தியாவில் வாக்கு அளிக்கும் வாய்ப்பு என்றுமே அமையாது போலிருக்கே??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-30638175379247675472010-09-04T15:34:22.987-07:002010-09-04T15:34:22.987-07:00இதைப் பற்றி, நண்பர் பேரா. செல்வாவுடன் முகநூலில் ப...இதைப் பற்றி, நண்பர் பேரா. செல்வாவுடன் முகநூலில் பேசிக் கொண்டிருந்த போது, தமிழ்நாட்டுக்கு என்று வருங்காலத் தலைவர்களுக்கான பயிற்சிப் பள்ளி என்று ஒன்றைத் தொடங்கி அதில் வளர்ந்து வரும் தலைவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று தோன்றியது. ஹார்வர்ட் பல்கலை இது போன்ற பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்துகிறது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள் முயன்றால், ஹார்வர்டு, ஐஐஎம், ஐஐடி, அண்ணா பல்கலை, சென்னைப் பல்கலை, மற்றும் உலகின் தலைசிறந்த பேராசிரியர்களை வைத்து, தமிழ்நாட்டில் இப்படி ஒரு பள்ளியைத் தொடங்கலாம்.மணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.com