சனி, டிசம்பர் 18, 2021

ஆங்கிலச் சொற்களை அப்படியே எடுத்துக் கொள்வது தமிழுக்கு வளம் தராதா?

தமிழில் கலைச்சொற்கள் படைப்பது பற்றி முகநூலில் சிறு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இது ஒன்றும் தமிழுக்குப் புதிதல்ல. உலகத்தின் ஆட்சிமொழியாக விளங்கும் ஆங்கிலம் பிறமொழிகளிலிருந்து சொற்களைக் கடனாகப் பெற்றதால் அது என்ன குறைந்துவிட்டதா என்று கேட்கிறார்கள். ஆங்கிலத்தைப் போல் தமிழும் இரவற்சொற்களை எடுத்தாளுவதால் மொழி மேலும் வளம்பெறுமேயல்லாது தொய்வடையாது என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். இந்த வாதமும் தமிழுக்குப் புதிதல்ல.

தமிழ் காலந்தோறும் பிறமொழிச் சொற்களை தன் மரபுக்கேற்பவும் மரபை விட்டு விலகியும் இரவலாக எடுத்தாண்டு வந்திருக்கிறது. தமிழில் இருக்கும் எண்ணற்ற பிறமொழிச் சொற்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. பிராகிருதச் சொற்களை முதலில் இரவல் வாங்கிய தமிழ், காலப்போக்கில் சமக்கிருதம், பாரசீகம், உருது, மட்டுமல்லாமல் ஐரோப்பிய மொழிச் சொற்களையும் இரவலாகப் பெற்றிருக்கிறது. தமிழில் இருக்கும் ஆட்சிமொழிச் சொற்கள் பெரும்பாலும் உருது மொழியிலும், ஆங்கிலத்திலும் இருப்பதற்குக் காரணம் நாம் பிறமொழி பேசியவர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததால்தான்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது இப்படி ஆங்கிலச் சொற்களை இரவலாகப் பெறுவதை விலக்கி சமக்கிருதச் சொற்களில் கலைச்சொல்லாக்கம் செய்ய முனைந்தார்கள். 1960கள் வரைக்கும் கூட தமிழ்நாட்டின் பாடநூல்களில் வடமொழிக் கலைச்சொற்கள் ஆளுமை செலுத்தின.

எடுத்துக் காட்டாகப் பின்வரும் சொற்கள் 1944ல் பாடநூல்களில் இருந்திருக்கின்றன, ஆனால் இவை இன்றும் நம்மில் பெரும்பாலோர்க்குப் புரியாதவை:

சோக்‌ஷிகள், க்‌ஷாரம், ஆஹார சமீகரணம், யோகவாஹி, சஞ்சாயகி, வாஹகம், ஹரிதகிகாமலம், அப்ஜ இரத்தகிகாமலம், பாக்கியஜனக அனிஷ்கர்ஷம், சங்கோஜயத்வம், பிரதிலோம, விபாஜியத்துவம், பிரதி மாகேந்திரம், அவினா சத்வம், அவிபேத்யம், சமாந்திர சதுர்புஜம், அதிருசிய ரேகை, நிஷ்காசினி, வித்யுத்லகானிகம், வக்ர பாவித்வம், உஷத்காலம், ஆபாஸபிம்பம், ஜ்யாமிதி, கிருஷித் தொழில்

இதைப் பற்றி விரிவாகவே என்னுடைய புழைக்கடைப்பக்கம் என்ற வலைப்பூவில் https://kural.blogspot.com/2011/01/1944.html எழுதியிருக்கிறேன்.

பெரும்பாவலர் பாரதியாரே மெம்பர் என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைப் படைக்கத் தடுமாறியிருக்கிறார். ஒருவழியாக அங்கத்தினர் என்ற வடசொல்லாட்சி நிலைபெற்றது. தனித்தமிழ் இயக்கம் அதை உறுப்பினர் என்று மாற்றியது. இல்லையேல் இன்றும் நாம் மெம்பர், பிரசிடென்ட், மினிஸ்டர் என்றுதான் சொல்லிக் கொண்டிருப்போம். வேட்பாளர் என்ற அழகான சொல்லால் கேண்டிடேட், அபேக்‌ஷகர் போன்ற பல்லை உடைக்கும் இரவற்சொற்கள் வழக்கொழிந்தன.

இரவற்சொற்களை நாம் அடிபட்டுக் கிடக்கும்போது போட்டுக்கொள்ளும் இடைக்காலக் கட்டு போலப் புழங்குவதில் தவறில்லை. "வயர் ரீவைண்டிங் செய்வது எப்படி" என்ற நூல் பலருக்கு வேலை வாய்ப்பை அளித்தது. அந்த நூலைத் தனித்தமிழில் எழுதியிருந்தால் அந்தக் காலத்தில் அவர்கள் தடுமாறியிருப்பார்கள். ஆனால், என்றென்றும் இரவற்சொற்களையே எடுத்தாளுவது மொழியின் வளத்தைப் பன்மடங்கு சிதைக்கும் என்பது எனக்குத் தெள்ளத்தெளிவாகவே புரிகிறது. இது ஏன் அறிஞர்களுக்கு விளங்கவில்லை என்று எனக்குப் புரியவில்லை.

ஒரு கலைச்சொல்லைத் தமிழில் ஆக்கும்போது அந்தக் கலைச்சொல்லின் பின்னணியில் இருக்கும் அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவையும் தமிழில் விளக்கக்கூடிய அளவுக்கு மொழி வளம் பெறுகிறது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நுட்பமான எண்ணங்களையும் ஆய்வையும் தம் தாய்மொழியிலேயே மேற்கொள்ள இது வழிவகை செய்கிறது. அப்படிச் செய்வதால் மொழி மட்டுமல்ல, மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் மக்களும் வளம் பெறுகிறோம்.

ஆங்கிலம் பன்னெடுங்காலம் பின் தங்கிய மொழியாகத் தாழ்ந்திருந்தது. அதனால், முன்னணி அறிவியல், தொழில்நுட்பக் கருத்துகள் மட்டுமல்ல, தத்துவங்களும் கூட கிரேக்க, இலத்தீன மொழிகளிலும் பிரான்சிய மொழியிலும் கற்பிக்கப்பட்டன. ஆங்கிலம் தன் வளர்ச்சிக்கு வேறு வழியில்லாமல் தம் மொழிக்குத் தொடர்பற்ற கிரேக்க, இலத்தீன, பிரான்சியச் சொற்களை எடுத்தாள வேண்டியிருந்தது. ஆங்கிலம் உலகத்தின் ஆட்சிமொழியாக மிளிர்ந்ததற்கு அந்த இரவல் மொழிகள் காரணமல்ல. அது அவர்கள் குடியேற்றப் பேரரசின் வெற்றியின் பக்க விளைவு. இதே போல் ஆங்கிலச் சொற்களை இரவலாக எடுத்துக் கொண்ட பலமொழிகள் கலவை மொழிகளாகச் சிதைந்தன. சொந்தமாக புதிய கருத்துகளை எழுதக்கூடிய உயர்மொழியாக மாறவில்லை. ஆங்கிலமும் கூடத் தற்காலத்தில்தான் புதிய கலைச்சொற்களைத் தன்னிடமிருந்தே படைத்துக் கொள்கிறது.

1980 களில் மிக்கையில் கொர்பச்செவ் சோவியத் ஒன்றியத்தின் தலைவரானபோது அவரது பேச்சுகளிலிருந்து இரண்டு உருசியச் சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்துக்குப் பரவின.

Perestroika (/ˌpɛrəˈstrɔɪkə/; Russian: перестройка),
glasnost (meaning "openness")

ஓரிரு ஆண்டுகளில் பெருநிறுவனங்களிலும் அரசியல் களங்களிலும் அந்தச் சொற்கள் ஆளுமை செலுத்தின. கொர்பச்செவ்வின் வீழ்ச்சிக்குப் பிறகு அந்தச் சொற்களும் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. புதிய நுட்பங்களை விளக்கும் கருத்துகளை இன்றைய ஆங்கிலம் பிறமொழிச்சொற்களில் நேரடியாக எடுத்துக் கொள்வதைக் கூடிய மட்டிலும் தவிர்த்துவிடுகிறது. அப்படிச் செய்தாலும் அது வெகு விரைவாகவே ஆங்கிலச் சொல்லுக்கு மாறிவிடுகிறது. தோசையையும், கட்டுமரத்தையும் Dosa, Catamaran என்றழைப்பது வேறு. இணையம், கணினி, வலைத்தளம், மின்னஞ்சல், தொலைக்காட்சி, தொலைபேசி, திறன்பேசி போன்ற சொற்களை என்றென்றும் ஆங்கிலத்திலேயே புழங்குவது வேறு. அப்படிச் செய்வது தமிழையும் தமிழர்களையும் என்றென்றும் அடிமைகளாக மாற்றிவிடும். இது பாரதியாருக்குத் தெரிந்திருந்தது. தற்காலத் தமிழறிஞர்களுக்குத் தெரியவில்லை.

தமிழ் இணையத்தின் தொடக்க காலத்தில் இணையம், கணினி, வலைத்தளம், மின்னஞ்சல் போன்ற கலைச்சொற்களை நாங்களே படைத்துப் பரப்பிக் கொண்டிருந்தோம். அப்போது இதெல்லாம் வேண்டாத வேலை என்று எழுத்தாளர் சுஜாதா எங்களைக் கிண்டல் செய்து கொண்டிருந்தார். ஆனால் அவரே பிற்காலத்தில் இந்தக் கலைச்சொற்களைப் பரப்புவதற்கு ஒரு நல்ல வழியைக் கண்டுபிடித்துச் சொன்னார். முதலில் இன்டர்நெட் (இணையம்), கம்ப்யூட்டர் (கணினி), இமெயில் (மின்னஞ்சல்) என்று ஆங்கில இரவற்சொல்லுக்குப் பிறகு தமிழ்ச் சொல்லைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும், பின்னர் இணையம் (இன்டர்நெட்), கணினி (கம்ப்யூட்டர்), மின்னஞ்சல் (இமெயில்) என்று முதலில் தமிழ்ச்சொல்லையும் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச் சொல்லையும் போட வேண்டும், கொஞ்ச நாள் கழித்து, அடைப்புக்குறிக்குள் இருக்கும் ஆங்கிலச் சொல்லைக் கழற்றிவிட வேண்டும் என்றார். அப்படித்தான், தமிழ் இணையத்தின் முன்னோடிகளுக்கு மட்டும் தெரிந்திருந்த பல கலைச்சொற்களைக் கோடிக்கணக்கான தமிழர்களுக்குக் கொண்டு சேர்த்தார் அவர்.


இன்று சுஜாதா இல்லை. ஆனால், நல்ல வேளை கவிஞர் மகுடேசுவரன் இருக்கிறார். அவர் நல்ல பல கலைச்சொற்களைப் படைப்பது மட்டுமல்லாமல் அவற்றைத் தம் கோடிக்கணக்கான வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கிறார். கலைச்சொல்லாக்கம் எவ்வளவு முதன்மையானதோ அதைக் காட்டிலும் மேலானது அவற்றை மக்கள் புழங்கப் பரப்புவது. அத்தகைய மாபெரும் தொண்டாற்றும் கவிஞர் மகுடேசுவரனைப் பாராட்டச் சொற்களே இல்லை! வாழிய அவர் தொண்டு.


பார்க்க:

கலைச்சொல்லாக்கம் - 1944ல் ஒரு கருத்தாடல்
ஞாயிறு, ஜனவரி 16, 2011
மணி மு. மணிவண்ணன்
புழைக்கடைப் பக்கம்
ஒரு புலம்பெயர்ந்த அமெரிக்கத் தமிழனின் எண்ணங்கள்

https://kural.blogspot.com/2011/01/1944.html


ஞாயிறு, செப்டம்பர் 13, 2020

And the Clock was Ticking...

And the Clock was Ticking

Mani M. Manivannan
September 13, 2013




The magistrate was used to these late night knocks at his door. That is the price one pays if one is the only authority who can grant last minute stays of execution for the death row convicts. Desperate lawyers would try every trick in the book to keep their clients alive for a few more minutes of their miserable lives.

He folded his lungi in half and threw a towel over his shoulders and walked to the door. It was two in the morning. He sighed. As he opened the door he saw the jail superintendent and a distraught looking young man.

"Sorry for waking you up in the middle of the night your honour. This young man claims to be a professor and a Presidential Scholar at the C. V. Raman institute. He has an incredible story to tell and I need the sound judgement of someone of your calibre to do the right thing."

"Very flattering" said the magistrate. "Come in and make it quick. And it better be good or I am throwing both of you out."

"Pardon me your honor" said the young man. "Sorry for disturbing you this late but you have to stop the execution of the four death row convicts if you want to save the world."

The magistrate was irritated at this lunacy and turned to stare at the superintendent.

"Professor, tell the magistrate what you do at the institute."

"Your honor, I work on a top secret project for the government to communicate with the people in the future and I just had a breakthrough."

The magistrate was getting impatient.

"Sir, your name is bigger than that of King Solomon for the people of the future and you are the symbol of wisdom to them."

"Go on young man, there is only so much flattery one can withstand at this time of the night."

"Sir, the people of the future were desperate to communicate with us. It seems that one of the four convicts will go on to invent a 'Nuclear Quencher' that can extinguish any nuclear bomb after serving time.

Supee looked at the magistrate with a quizzical eye.

The professor continued. "All four will serve a life sentence, learn a lot during their jail time and try hard to pay their debt to the society. And they help each other towards this goal."

"And if they are all executed, earth's time line is so warped that a global thermonuclear crisis wipes out the planet."

The magistrate looked at the young man with incredulity.

"Your honor, all lives are interconnected and each has a purpose. Our own beliefs tell us that even asuras had a purpose in God's plan."

"Professor, that may have been true. But don't forget that each of them was killed by the Gods. Our Gods were quite fond of death penalty."

"Your honor, that may be true. But today, you hold the future lives of untold billions humans and other living things in your hand. You just need to stay the execution until I have a chance to convince the appeals court. You need to make the call."

"Can we let the vengeance of collective conscience overcome our humane nature and deny these evil men a chance to reform and actually save billions of lives?"

"You decide" said the professor.

The clock was ticking.

செவ்வாய், பிப்ரவரி 11, 2020

ஏன் அயர்லாந்து மக்கள் அவர்கள் தாய்மொழியான எய்ரவைப் பேசுவதில்லை?

ஏன் அயர்லாந்து மக்கள் அவர்கள் தாய்மொழியான எய்ரவைப் பேசுவதில்லை?

உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் அவரவர் தாய்மொழியைப் பேசுகிறார்கள். ஆனால், அயர்லாந்து மக்கள் அவர்கள் தாய்மொழியான ஏய்ரவைப் பேசுவதில்லை. அவர்கள் பேசும் மொழி ஆங்கிலம். அவர்களுடைய தாய்மொழியான ஏய்ரவைப் பேசுபவர்கள் அங்கு வெகு சிலரே. அவர்கள் நாளேடுகளில் கடைசிப் பக்கம் மட்டும் ஏய்ர மொழியில் அச்சிடப்பட்டிருக்கும். தெருப்பெயர்கள் ஆங்கிலத்திலும் ஏய்ரவிலும் இருக்கும். ஆனால் ஏய்ரவில் இருப்பதைப் படிக்கக்கூடியவர்கள் வெகு சிலர். ஏன் அப்படி?
அயர்லாந்து மக்கள், அவர்கள் அண்டை நாடான இங்கிலாந்திடம் தோற்று, தங்கள் உரிமைகளை இழந்து, அடிமைப் பட்டு, சிறுமைப்பட்டு சில நூற்றாண்டுகள் வாழ்ந்த போது தங்கள் தாய்மொழியை இழந்து விட்டார்கள். இப்போது அரும்பாடுபட்டுத் தங்கள் தாய்மொழியை மீட்டெடுக்க முனைகிறார்கள்.

இழந்ததை மீட்பது கடினம். தமிழர்கள் தமிழைப் போல் தொன்மையும், தொடர்ச்சியும், மாட்சியும் உள்ள தாய்மொழியைக் கொண்டவர்கள். தமிழர்கள் தன்னாட்சி இருந்தவரைக்கும் தமிழ் தம்மிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. தன்னாட்சியை இழந்து சிறுகச்சிறுகப் பிறமொழிகளின் ஆட்சியின் கீழ் வந்த போதும் தமிழ்ப் புலவர்களும் தமிழ் மக்களும் அரசுகளின் ஆதரவில்லாமலேயே தமிழைத் தக்க வைத்துக் கொண்டனர்.

பிறமொழிக் கலப்பை மட்டுப்படுத்தித் தமிழ் கலங்கிப் போய் மங்கிடாமல் காப்பாற்றியது தனித்தமிழ் இயக்கம். ஆனால், தற்காலத்தில் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தின் கீழ் உலகமயமாக்கலின் வணிகத்தில் திளைத்திருக்கும் தமிழர்களுக்கு ஆங்கிலக் கலப்பு உவப்பாக இருக்கிறது. ஆங்கிலக் கண்ணாடி வழியாக உலகைப் பார்க்கும் தமிழர்களுக்கு அயல்மொழிகளின் சொற்களும் ஓசைகளும் அப்படியே தமிழிலும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

அப்படிப் பட்ட கலப்பு தமிழைப் பிரித்து இன்னொரு கலவை மொழிக்கு இட்டுச் செல்லும். கலவை மொழிகளில் அறிவியல் எண்ணங்களைத் துல்லியமாக எழுதும் தன்மையும் குறைவு. உயர்தனிச் செம்மொழிகளைப் போல் சான்றோர் இலக்கியம் படைக்கும் ஆற்றலும் இருக்காது.
தமிழ் எழுத்துகளை வைத்துக் கொண்டு சமக்கிருதம் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். (சுலோகப் பாடல்களைத் தமிழில் எழுதிப் பாடுபவர்கள் முதற்கொண்டு வேதங்களையும் தமிழில் எழுதி மனப்பாடம் செய்பவர்கள் வரை).

தமிழ் எழுத்துகளை வைத்துக் கொண்டு கணிக்காரம், படகர், இருளர், பணியர், சௌராட்டிரம் மொழிகளையும் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக வர்க்க எழுத்துகளையும், கூட்டெழுத்துகளையும், கிரந்த எழுத்துகளையும் தமிழ் யூனிக்கோடு பட்டியலில் சேர்க்கப் பலர் முனைகிறார்கள், தாய்லாந்தில் "தாய்" மொழியில் தமிழோடு வடமொழியையும் கலந்து எழுதுவதால் முழுக் கிரந்த எழுத்துகளையும் கூட்டெழுத்துகளையும் தமிழில் சேர்க்க வேண்டும் என்று முழுமூச்சாய் முனைபவர்களும் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

இதையெல்லாம் அணை போட்டுக் கொண்டிருக்க முடியாது. அப்படிச் செய்பவர்கள் எல்லாம் தமிழிலிருந்து பிரிந்து வெவ்வேறு மொழிகளாகக் கிளைத்துக் கொண்டே போவார்கள்.

தொன்மைத் தமிழ் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதில் கலப்படம் செய்தாலும், கலவை மொழி தனியே கிளைத்துப் பிரிந்து விடும். தனித்தமிழ் என்றும் அழியப் போவதில்லை. அதைப் பேசுபவர்களின் எண்ணிக்கை குறையலாம் ஆனால் அழியாது.

கிளையாளம் வேண்டுபவர்கள், தமிங்கிலம் வேண்டுபவர்கள், தமிண்டரின் வேண்டுபவர்கள், தமிக்கிருதம் வேண்டுபவர்கள், என்று யார் வேண்டுமானாலும் தனித்தனி மொழிகளைப் பிரித்துக் கொண்டு செல்லட்டும். ஆனால், தனித்தமிழ் மட்டுமே தொல்காப்பியத்துக்கும் சங்கத்தமிழுக்கும், கம்பனுக்கும் வள்ளுவனுக்கும் இளங்கோவுக்கும் உரிமை கொண்டாட முடியும்.

Why Don’t The Irish Speak Irish?

The Danes have Danish, the French speak French, the Slovakians talk in Slovak yet the Irish don’t speak Irish, but rather English. Almost all nations and people have their own language yet the Irish are one of the few nations who have a language that very few of its people can speak. Ireland is one of the only countries in Europe whose primary language is that of a foreign country.

https://whistlinginthewind.org/2015/08/20/why-dont-the-irish-speak-irish/

திங்கள், பிப்ரவரி 10, 2020

மொழிமரபு - பிறமொழிப் பெயர்கள்

மொழிமரபு - பிறமொழிப் பெயர்கள்
தமிழ்நாட்டின் ஊர்ப்பெயர்களை ஆங்கிலேயர் ஆங்கிலத்தில் (Triplicane, Tuticorin, Sadras, Trichy என்பது போல்) குதறியிருந்ததைப் பார்க்கும்போது எரிச்சலாக இருக்கும். அமெரிக்காவில், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களோடு பல பத்தாண்டுகள் வாழ்ந்த பிறகுதான் அவர்கள் பிறமொழிப் பெயர்களை ஆங்கிலத்தின் தன்மைக்கு ஏற்ப, தமக்கு இயல்பாக வரும் ஒலிப்பில் பலுக்குகிறார்கள் என்பது புலப்பட்டது. Triplicane, Tuticorin, Sadras, Trichy போன்ற பெயர்கள் ஆங்கிலேயர் பிற ஆங்கிலேயர்களுக்குப் புரியும் வகையில் எழுதிய ஆங்கிலப் பெயர்கள். ஆம், அவை தமிழ்நாட்டு ஊர்ப்பெயர்கள்தாம். ஆனால், அந்தப் பெயர்கள் ஆங்கிலத்தின் ஒலிப்பியலைப் பின்பற்றி, அவர்கள் நெடுங்கணக்கில் எழுதப்பட்டவை.

ஆனால், ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற பிறகும் ஆங்கிலத்தை ஆட்சிமொழியாகக் கொண்டு ஆட்சி நடத்தும் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு, இந்த ஆங்கிலப் பெயர்கள் உறுத்துகின்றன. இவற்றைத் தத்தம் மொழிக்கு நெருக்கமாக மாற்ற முயல்கிறோம். Thiruvallikeni, Thoothukkudi, Cathurangappattinam, Thiruchirappalli என்ற பெயர்கள் தமிழர்கள் தமக்கும் பிற இந்தியர்களுக்கும் தமிழை ஆங்கில எழுத்துகளில் தமிழுக்கு நெருக்கமான முறையில் எழுத முயன்றதன் விளைவு. இந்தப் பெயர்களை ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களால் இயல்பாகப் பலுக்கவும் முடியாது, பலுக்கினாலும் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பிறராலும் புரிந்து கொண்டு எழுத முடியாது. இது மொழி மரபு புரிந்தவர்களுக்குத் தெரிந்ததுதான்.


பெயர்ச்சொற்களை, அதுவும் தனியாள் பெயர்கள், ஊர்ப்பெயர்கள், நாட்டுப் பெயர்களை மூல மொழியைப் போலவே எழுத வேண்டும், பேச வேண்டும் என்று சில தமிழர்கள் கருதுகிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையில் மூலமொழிகளைப் பற்றி அக்கறையற்றவர்கள். உலகில் உள்ள பிறமொழிப் பெயர்களை ஆங்கிலக் கண்ணாடி வழியாகத்தான் பார்த்துப் பழகியவர்கள். அவர்களுக்கு எந்த நாட்டின் பெயராக இருந்தாலும், எந்த மொழியில் உள்ள பெயராக இருந்தாலும், ஆங்கில எழுத்துகளில் தமிழைப் போல் படித்துத் தமிழில் எழுத முயல்பவர்கள். உண்மையில் இவர்களுக்குத் தாய்மொழியிலும் புலமை இருக்காது. ஆங்கிலத்தையும் தாய்மொழியைப் போல் அறிந்தவர்களல்லர். ஆனால் 'நான் பிறந்திருக்க வேண்டியது இங்லேண்ட்' என்று பாடிக் கொண்டு தம்மை ஆங்கிலேயராய், அமெரிக்கராய், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவராய்க் கருதித் தமிழையும் தமிங்கிலமாக்கத் துடிப்பவர்கள்.


சிரியா நாட்டின் தலைநகரின் பெயரைத் தமிழில் எப்படி எழுதுவது என்று ஒரு பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது! அந்த நகரம் 3500 ஆண்டுகள் பழமையானது. அதன் பெயர் அக்கேடியன் மொழியில் 𒀲𒋙 Imerišú இமெரிசு, எகிப்திய மொழியில் 𓍘𓄠𓈎𓅱 T-m-ś-q த-ம-ச-க், பண்டைய அரமேய மொழியில் Dammaśq (דמשק) தம்மாசக், விவிலிய காலத்துப் பண்டைய எபிரேய மொழியில் Dammeśeq (דמשק) தம்மெசெக் என்று போகும். இதைப் பண்டைய கிரேக்கர்கள் Δαμασκός என்றெழுத அவர்களிடமிருந்து ரோமாபுரத்தார் Damascus என்று தம் இலத்தீன் எழுத்துகளில் எழுதியதை ஆங்கிலேயரும், அமெரிக்கர்களும் அதே எழுத்துகளில் தம் மொழியில், ஆங்கிலத்தில் வழங்குகிறார்கள்.


இந்த Damascus அங்கே வாழும் மக்கள் தம் நகருக்கு இட்ட பெயரல்ல. அது புறப்பெயர். ஆங்கிலம் பேசுபவர்கள் இலத்தீனிலிருந்து, கிரேக்கத்திலிருந்து எடுத்துக் கொண்ட பெயர். உண்மையில் மூலமொழிப் பெயருக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்றால் அதில் கிரேக்க/இலத்தீன் தன்மையுடன் -us என்ற ஈற்று இருக்கக்கூடாது. ஆனால், அது கிரேக்க, இலத்தீன், ஆங்கில மொழிமரபுகளுடன் பின்னிப் பிணைந்தது. அதை அவற்றைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள்.


விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்த பாதிரிகள் எபிரேயம் அறிந்தவர்கள். அவர்களுடைய மொழிபெயர்ப்புகளில் விவிலியப் பெயர்கள் எபிரேயத்துக்கும் பண்டைய கிரேக்கம்/இலத்தீனுக்கும் நெருக்கமாக இருக்கும்.

யோவான் (John), பேதுரு (Peter), தாவீது (David), மரியாள் (Mary), மத்தேயு (Mathew), ஆதாம் (Adam), ஏவாள் (Eve), ஏசு (Jesus) போன்ற பெயர்கள் ஆங்கிலப் பெயர்களிலிருந்து பெரிதும் வேறுபட்டிருக்கின்றன. பிற ஐரோப்பிய மொழிகளிலும், உலக மொழிகளிலும் இந்த வேறுபாடுகள் உள்ளன. ஆங்கிலத்தில் உள்ள பெயர்கள் மூலப்பெயர்களிலிருந்து விலகியவை. அவை ஆங்கில மரபுக்கேற்று வழங்கும் பெயர்கள்.
ஏசு என்ற பெயர் எப்படியெல்லாம் எபிரேய மொழியிலிருந்து பிறமொழிகளில் திரிந்தது என்று பார்க்கலாம்:
எபிரேயம்: Yeshua (ישוע)
கிரேக்கம்: Yeshu (Ἰησοῦς) (drop the final "a")
இலத்தீன்: Iesus (Iēsous) (sh → s, Y → I, add final s)
கால மாற்றத்தில் J என்ற எழுத்து இலத்தீனில் பரவலான பிறகு
இலத்தீன்: Jesus (pronounced yay-soos)
ஆங்கிலம்: Jesus (pronounced jee-ses)
இதே போல் Yochanan என்ற எபிரேயப் பெயர் மாறியது.
Yochanan → Yohana → Iohannes →
Jean (பிரெஞ்சு)/ John (ஆங்கிலம்)/ Sean (ஐரிசு)/ Ian (இசுக்காட்டிய கேயலிக்கு) / Juan (இசுப்பானியம்)/ யோவான் (தமிழ்) / யோகண்ணன் (மலையாளம்??)
இவற்றில் எது மூல ஒலிப்புக்கு நெருங்கியது? John என்ற ஆங்கிலப் பெயரா?
மத்தேயு என்ற பெயரை எடுத்துக் கொள்ளுங்கள்.
அது கிரேக்கத்தில் ματθαιος /Mat-thaios/.
ஆனால் உருசியனில் த-கர ஒலி இல்லை. என்ன செய்தார்கள்?
த-கர ஒலியை ஃப-கரமாக மாற்றினார்கள்!
Матфей Matfay.
விவிலியம் போன்ற ஒரு மத நூலைத் தம் மொழிக்குக் கொண்டுவருவதற்குக்கூட யாரும் தம் மொழியில் புது எழுத்துகளைச் சேர்க்கவில்லை. புதிய ஒலிப்புகளைக் கூட்டவில்லை.
தமிழிலும் அப்படித்தான். கம்பராமாயணத்தில் வடமொழிப் பெயர்களை எழுதுவதற்காகக் கிரந்த எழுத்துகளைக் கம்பன் சேர்க்கவில்லை. பெரிய புராணத்தில் சேக்கிழார் வடமொழிப் பெயர்களுக்காகக் கிரந்த எழுத்துகளைக் கூட்டவில்லை.

தமிழில் பிறமொழி ஒலிப்புகளைக் கூட்ட வேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் மூல மொழிகளில் ஒலிப்புகளுக்கு நெருங்கிய ஒலிகளுக்காகக் கூட்ட வரவில்லை. அதைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவர்கள் அக்கறைப்படுவதெல்லாம், ஆங்கிலத்தில் உள்ள ஒலிகளைத் தமிழில் கொண்டு வரவேண்டும் என்பதுதான். ஆனால் ஆங்கிலத்தில் உள்ள f, q, z, என்ற ஒலிகளுக்கு இணையான கிரந்த எழுத்துகள் இல்லை. எனவே தற்போது இருக்கும் கிரந்த எழுத்துகள் அவர்களுக்குப் போதாது.

என்ன செய்வார்கள்? ஒரு முறை துக்ளக் சோ f என்ற எழுத்தையே ஒரு மெய்யெழுத்தாகக் கூட்டிக் கொண்டு அதற்கு நெடுங்கணக்கு வரிசை ஒன்றை அச்சிட்டுக் காட்டினார். அதாவது:
f, fா, fி, fீ, fு, fூ , ெf, ேf, ைf .... என்று போகும்.

இப்படி நேரடியாகவே ஆங்கில எழுத்துகளைத் தமிழ் உயிர்மெய்யாக்கும் கருத்தைக் கொண்டுவந்தார். எடுபடவில்லை.

இப்படிக் கருப்பு நிறமுள்ள, கருங்கூந்தலுள்ள தமிழன்னையை வெறுத்து, வெள்ளை நிறமுள்ள மஞ்சள் கூந்தல் கொண்ட பெண்ணாகத் தமிழை மாற்றத் துடிக்கும் சிறுபிள்ளைகளைக் கொல்லைக்குக் கூட்டிச் சென்று குளிப்பாட்டிக் கூட்டி வர முயலலாம். ஆனால் பிடிவாதம் பிடித்த சிறு பிள்ளைகள் அடம் பிடித்தால் போகிற போக்கில் போவென்று கொல்லையிலேயே விட்டு விட வேண்டியதுதான்.

செந்தமிழ் வழக்கும் கலவைக் கொச்சை வழக்கும்

செந்தமிழ் வழக்கும் கலவைக் கொச்சை வழக்கும்
தமிழை எழுதும்போது பிறமொழிச் சொற்களை பிறமொழி ஒலிப்புடனே எழுதுவதுதான் வளர்ச்சி என்று கொடி பிடிக்கும் குழுக்கள் இன்று நேற்றல்ல, கல்லெழுத்துகளில் பொறிக்கும்போதிருந்தே இருந்திருக்கின்றன.

டுமீல் டுமீல் என்று ரிஷி சுட்டான்
டிஸ்யூம் டிஸ்யூம் என்று ஜார்ஜ் குத்தினான்
ஹா ஹா ஹா என்று எம்ஜிஆர் சிரித்தார்
ஹாஜி என்பவர் ஹஜ்ஜுக்குச் சென்று வந்தவர்
டமாஸ்கஸ் ஸ்விஸ்ஸின் தலைநகர் அல்ல

என்றெழுதுவதுதான் தமிழ். கிரந்த எழுத்துகள் இல்லாவிட்டால் இவற்றை எழுதுவது நகைச்சுவையாகிவிடும் என்கிறார்கள்.

அரபி நூல்களில் அரபி எழுத்துகளை உயிரெழுத்துகளைக் குறிக்காமலேயே மெய்யெழுத்துகளில் மட்டுமே எழுதுவது மரபு. மொழி தெரிந்தவர்கள் எங்கே என்ன எழுத்தை எப்படிப் படிப்பது என்று புரிந்து கொண்டு படித்து விடுவார்கள். புதிதாகக் கற்பவர்கள் உயிரெழுத்துகளுக்கான குறியீடுகளை இட்டுப் படித்தாலும் நாளடைவில் அவையில்லாமெலேயே படிக்கத் தொடங்கி விடுவார்கள். இதை மாற்ற வேண்டும், எல்லோரும் எப்போதுமே உயிரெழுத்துக் குறிகளை இடவேண்டும் என்று யார் கொடி பிடித்தாலும் அது நடக்குமா என்று தெரியாது! மொழிமரபின் தாக்கம் அப்படி.

அதே போல், தமிழில் இருக்கும் ஒலிகளுக்கான குறிகளைத் தேவநாகரி நெடுங்கணக்கில் சேர்த்தாலும் சமக்கிருதத்தில் எழுதும்போது அவற்றைச் சேர்த்தெழுதும் மரபு வேரூன்றுமா? வாய்ப்பில்லை. அரபி, சமக்கிருதம் போன்ற செம்மொழிகளில் அவ்வளவு எளிதாகப் பிறமொழி எழுத்துகளைச் சேர்க்க மாட்டார்கள்.

வாழும் மொழிகளில் பிறமொழிக் கலப்பு நிகழ்வது வெகு இயல்பானது. அதிலும் தமிழைப் போன்ற நெடிய மரபைக் கொண்ட மொழிகளில் இத்தகைய கலப்பை அதன் செம்மொழி வழக்கு காலப்போக்கில் உண்டு செரித்துத் தன்வயமாக்கிக் கொண்டு வந்திருப்பதை நாம் வரலாற்றில் பார்க்கிறோம். பிறமொழிப் பெயர்களைத் தமிழில் எப்படி எழுதுவது என்பதில் நாம் கல்லில் பொறிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே இருவேறு தன்மைகளைப் பார்க்கிறோம். தமிழை எழுத தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துகள் மட்டுமே போதும் என்று புலவர்கள் விதித்ததைத் தொல்காப்பியம் பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக, தொல்காப்பிய காலத்தில் புலவர்கள் அறிந்திருந்த வடமொழியான பாகதப் (Prakrit) பெயர்களையும் சொற்களையும் தமிழில் இரவல் வாங்கும்போது வடமொழி எழுத்துகளை நீக்கி எழுதுங்கள் என்றே தொல்காப்பியர் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், கல்வெட்டுகளில் பொறித்தவர்களுக்குத் தொல்காப்பிய மரபு தெரியாமல் இருந்திருக்கலாம். அல்லது அவர்கள் இன்றைக்கும் சிலர் கம்பு சுற்றுவது போல் பிறமொழிப் பெயர்களை அவர்கள் பலுக்குவது (உச்சரிப்பது) போல் ஒலிக்க வேண்டுமென்றால் அவர்களுடைய எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பொறித்திருக்கலாம்.

[தமிழுக்குப் புதிய எழுத்துகள் தேவையா - ஓர் அலசல்]

ஒலிப்புள்ள ஒலிகளுக்கும் (G, J, D, B etc.), காற்றொலிகளுக்கும் (KHA, GHA, CHA, JHA, DHA, PHA, BHA etc.) தமிழில் எழுத்துகள் இல்லை. ஒலிப்புள்ள ஒலிகள் இயல்பாகத் தமிழில் வரும்போது அவற்றை ஒலிப்பிலா ஒலிகளுக்குள்ள வல்லெழுத்துகளால் எழுதினாலும், அவற்றுக்கு முன் உள்ள எழுத்துகள் அந்த ஒலிப்பிலா வல்லொலிகளை மென்மையாக்கி விடுகின்றன. அதனால்தான் காகம், தங்கம், முருகன், பஞ்சு, மஞ்சள், படம், வண்டு, பதம், பந்து, கொம்பு போன்ற சொற்களில் சொல்லிடை வரும் வல்லின எழுத்துகளை நாம் ஒலிப்பிலா எழுத்துகளாக (K, C, T, P - க,ச,ட,த,ப என்று) எழுதினாலும் ஒலிப்புடன் (G, J, D, B என்று) சொல்கிறோம். அவற்றுக்கென்று தனியாக எழுத்துகளைத் தமிழ் நெடுங்கணக்கில் சேர்க்கவில்லை. தமிழில் ஒலிப்புள்ள ஒலிகள் சொல்முதல் வாரா. காற்றொலிகள் தமிழில் இல்லை. எனவே அவற்றுக்கான எழுத்துகளும் இல்லை.

பிறமொழிப் பெயர்களில் இவை வரும்போது அவற்றைக் கல்லில் பொறித்த சிலர் சில இடங்களில் தமிழில் இல்லாத எழுத்துகளுக்குப் பகராகப் பாகதப் பிராமி எழுத்துகளில் பொறித்திருக்கிறார்கள். அதே போல், பின்னாளில் கல்வெட்டுகளில் தமிழ்ப் பெயர்களைச் சங்கத (Sanskrit) மொழியில் பொறித்தவர்கள் சங்கதத்தில் இல்லாத தமிழெழுத்துகளைத் தமிழிலேயே பொறித்திருக்கிறார்கள். ஆனால், சங்கதத்திலோ, பாகதத்திலோ, பாகத மொழிகளிலிருந்து கிளைத்த இன்றைய வடவிந்திய மொழிகளிலோ, தமிழெழுத்துகள் வேரூன்றவில்லை. தமிழிலும் இலக்கிய வழக்கில் பாகதப் பிராமி/சங்கதக் கிரந்த எழுத்துகளைத் தமிழ் மன்னர்கள் தமிழகத்தை ஆளும் வரைக்கும் சேர்க்கவில்லை. தொல்காப்பியரும் சங்கப்புலவர்களும், வள்ளுவரும் இளங்கோவும், ஆழ்வார்களும் நாயன்மாரும், கம்பரும் சேக்கிழாரும், வடமொழிச் சொற்களை வடவர் எழுத்துகளை நீக்கியே எழுதினார்கள்.

தமிழில் வடமொழிச் சொற்களை எழுதும்போது கிரந்த எழுத்துகளைக் கலந்து எழுதும் பழக்கத்தை மணிப்பிரவாள நடை என்றார்கள். அதாவது வடமொழி எழுத்துகளையும் தமிழெழுத்துகளையும் கலந்து எழுதுவதை மணியையும் பவழத்தையும் கலந்து வழங்குவது போல என்று நோக்கினார்கள். இதைத் தொடங்கியவர்கள் பௌத்த, சமணக் கோட்பாடுகளைத் தமிழில் எழுத முனைந்த முனிவர்கள்தாம். பிற்காலத்தில் அதே போல் சைவ, வைணவ ஆசிரியர்களும் இப்படித் தம் சமய நூல்களுக்கான விளக்கவுரைகளை மணிப்பிரவாள நடையில் எழுதினார்கள்.

இப்படிப்பட்ட கலவை நடையால் சேரநாட்டுத் தமிழ் தன் இயல்புத்தன்மையை இழந்து தன் மரபை மறந்து மாற்றார் மொழியாய், மலையாளமாய், பிரிந்து விட்டது. வடமொழிக்கான கிரந்த எழுத்துகளோடு தமிழுக்கான வட்டெழுத்துகளையும் சேர்த்து மலையாள நெடுங்கணக்கு உருவானது. மலையாளத்தில் வடமொழிச் சொற்களை அதே உச்சரிப்புடன் எழுத முடியும். தமிழெழுத்துகளையும் அவற்றின் ஒலிப்பு மாறாமல் எழுத முடியும். சங்க இலக்கியத்திலிருந்து கம்பன் வரைக்கும் உள்ள தமிழ் இலக்கியங்களை மலையாளத்தில் எழுத முடியும், படிக்க முடியும், புரிந்து கொள்ள முடியும். ஆனால், தம் மொழியைக் கலவை மொழியாக்கிய பிறகு சேரநாட்டுத் தமிழர்கள் மலையாளிகளாகத் தமிழுக்கு மாற்றார்களாக விலகிப் போனார்கள்.

தமிழ் மன்னர் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர், பிறமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட அரசர்களின் ஆட்சியின்போது தமிழிலக்கியத்திலும் அப்படிப்பட்ட, தொல்காப்பிய விதியை மீறிய, மணிப்பிரவாளநடை வேரூன்றத் தொடங்கியது. தொல்காப்பியர் முதல், கம்பரும் சேக்கிழாரும் வரை தொடர்ந்த இந்த மரபு அருணகிரிநாதர் காலத்தில் அறுந்தது. ஆனாலும் மலையாளத்தைப் போல் எழுத்தும் மொழியும் முழுக்க முழுக்க மாறவில்லை. காற்றொலிகளைத் தமிழில் சேர்க்கவில்லை. ஸ, ஷ, ஜ, ஹ போன்ற ஒரு சிலக் கிரந்த எழுத்துகளை மட்டும் சேர்த்துக் கொண்டார்கள். இதன் விளைவு தமிழிலக்கியத்தில் மட்டுமல்லாமல் தமிழ் உரைநடையிலும் வடசொற்கள் வெகுவாகக் கலந்து தமிழ் உரைநடையைத் தமிழர்களே புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மொழியைச் சிதைத்தன.

தமிழிலக்கியத்தில் எளிமையையும் செந்தமிழ்த் தன்மையையும் மீட்டெடுத்துத் தற்கால இலக்கியத்துக்குக்கான வழியை அமைத்துக் கொடுத்த வள்ளலார் பெருமானே அவரது உரைநடையில் கிரந்த எழுத்துகள் கலந்த வடமொழிச் சொற்களை அள்ளித் தெளித்து எழுதியிருந்தார். அவற்றை இன்று படிக்கும்போது இதையெல்லாம் மக்கள் எப்படிப் படித்துப் புரிந்து கொண்டார்களோ என்று வியப்பு மேலிடுகிறது.

வள்ளலார் அருளிய உபதேசக் குறிப்புகளிலிருந்து:

“பூர்வத்தில் விந்துவும், உத்தரத்தில் நாதமும் இருக்கின்றன. விந்து ஆன்மா, நாதம் பரமான்மா. நாதத்தோடு விந்து சேர்தலால், விந்து சத்தியும், நாதம் சிவமும் ஆகின்றன. விந்துவுக்சூ உத்தர நியாயம் பூர்வ நியாயமாவது எல்லாத் தத்துவங்களுக்கும் புறத்தும் அகத்தும் மற்றும் விளங்கி, தத்துவங்களைத் தன்வசப்படுத்தியும் தொழில்களைச் செய்வித்தும் தனித்து நின்றும் தன்னோடு தத்துவங்களைச் சேர்க்கின்ற படியால், விந்து சத்தனாயும் தத்துவங்கள் சத்தியாயும் இருக்கும். மேலும் ஆன்மாவுக்குச் சகல விளக்கமாகிய சாக்கிர ஸ்தானம் லலாடம், ஆதலால், விசேடம் சிறந்தது லலாடத்தில் மூக்குநுனியாகிய புருவமத்தி. இதற்கு அனுபவ சித்திகள் திரயோதசாந்தம் வரையிலு முண்டு.

திரயோதசாந்தமாவது யாதெனில்: ஜீவசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி சுழுத்தி ஆக 3. நிர்மலசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி சுழுத்தி ஆக 3. பரசாக்கிரம், மேற்படி சொப்பனம் மேற்படி சுழுத்தி ஆக 3. குருசாக்கிரம், குருசொப்பனம், குருசுழுத்தி, குருதுரியம், குருதுரியாதீதம் ஆக 5, ஆக மொத்தம் 14. இதற்கு மேலுமுள சுத்தசிவசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி, சுழுத்தி, மேற்படி துரியம், துரியாதீதம் – இவை சேருங்கால் ஜீவ சாக்கிராதி நீக்கப்படும். இவ்வள வனுபவமும் பூர்வத்திலுள்ள அனுபவிகளால் குறிக்கப்பட்ட நிலைகளில் இல்லை. ஒருவாறு குருதுரிய பரியந்தம் வேதாகமங்களாலும் தத்துவராயர் முதலிய மகான்களனுபவத்தாலும் குறிக்கப்படும். அதற்கு மேற்பட்ட அனுபவம் சுத்த சன்மார்க்க சாத்தியம்.”[பார்க்க:]

கீழே உள்ளது 1814 இல் சித்தூர் மாவட்டத்தில் மக்கள் கூடிப் பேச்சுவார்த்தை நடத்தி குறை நீக்கி ஒப்பந்தம் செய்து கொள்ளும் மக்கள் அறமன்றம் அல்லது அதாலத்துக் கோர்ட்டு என்ற ஓர் அமைப்பில் நடந்த வழக்கில் வந்த ஒரு மறுமொழியின் பகுதியைக் கீழே தருகிறேன். அன்றைக்குத் தமிழில் வடமொழிச் சொற்கள் எந்த அளவு கலந்திருக்கின்றன என்பது நமக்கு வியப்பை அளிக்கலாம்:

வாதிகள் கொடுத்த ரிப்ளை
ஸாநகரிஷி, மனுப்பிரம்மரூபமும், ஸநாதனரிஷி மயப்பிரம்மரூபமும், பிரத்னஸரிஷி சில்பிப் பிரம்மரூபமும், சுபர்னஸரிஷி விஸ்வக்ஞப் பிரம்மரூபமும் இந்தப் பிரம்மரிஷிகளில் வகுத்துக் கொண்டவர்களின் வம்மிசத்தார்களாகிய தங்களுக்கு வேதோக்தமாய் மேற்கண்ட ரிஷிகளின் கோத்திரசாகை பிற வகைகளும் உண்டாயிருப்பதாகவும்,
வேதபிராமணப் பூர்வீகமாய் மனுப்பிரம்மாவிற்கு இரும்பு வேலையும் ரிக்வேத பாராயணமும் துவஷ்டப் பிரம்மாவுக்கு தாமிர வேலையும் சாமவேத பாராயணமும் விஸ்வக்ஞப் பிரம்மாவுக்கு சுவர்ண வேலையும் பிரணவவேத பாராயணமும் ஆகிய இந்தப் பஞ்சவித கன்மங்களை அனஷ்டித்து விதிப்படி வருகிறதினாலே உலக சம்ரக்ஷ்ணையாகி வருகிறதாகவும்,
தங்களுடைய அவுபாஸன ஓமகுண்டலத்திற்கு தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு முதலான பஞ்சலோகங்களையும் ரத்தினம் முதலான நவமணிகளையும் ஆகுதி கொடுத்து அதினாலே சிருஷ்டிதிதி, சம்ஹாரம், திரோபாவம், அநுக்கிரக முதலானதற்கும் அஸ்திர ஆயுதங்களை உண்டாக்கவும் சென, ஆசன, அத்தி என அத்தியர் பதானதான பிரிதீ சஷ்டி கர்மமும் சர்வதாபிமானமும் அரசுநிலை ஆக்கினாச்சுரமும் இஷ்டகாம் யார்த்தமும் ஜனன மரணநரக கதியும் ஆதாரமாயிருப்பதுமன்றி சர்வாதார கடவுளாக்கினைக்குச் சம ஆதாரமாயிருக்கின்றது மன்றியில்....” [பார்க்க]

இது போன்று தமிழைக் கலவை மொழியாக்கிய மணிப்பிரவாள நடை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்தது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தனித்தமிழ் இயக்கம் தோன்றிச் செந்தமிழ் நடையை மீட்டெடுக்கத் தொடங்கிய பின்பும் இது தொடர்ந்தது. எடுத்துக் காட்டாகப் பின்வரும் சொற்கள் 1944ல் தமிழ்நாட்டுப் பாடநூல்களில் இருந்திருக்கின்றன,

ஆனால் இவை இன்றும் நம்மில் பெரும்பாலோர்க்குப் புரியாதவை:
சோக்‌ஷிகள், க்‌ஷாரம், ஆஹார சமீகரணம், யோகவாஹி, சஞ்சாயகி, வாஹகம், ஹரிதகிகாமலம், அப்ஜ இரத்தகிகாமலம், பாக்கியஜனக அனிஷ்கர்ஷம், சங்கோஜயத்வம், பிரதிலோம, விபாஜியத்துவம், பிரதி மாகேந்திரம், அவினா சத்வம், அவிபேத்யம், சமாந்திர சதுர்புஜம், அதிருசிய ரேகை, நிஷ்காசினி, வித்யுத்லகானிகம், வக்ர பாவித்வம், உஷத்காலம், ஆபாஸபிம்பம், ஜ்யாமிதி, கிருஷித் தொழில்.

அந்தக் காலத்திய தினமணி, ஆனந்த விகடன், சுதேசமித்திரன் போன்ற இதழ்களைப் படித்தால் இத்தகைய மணிப்பிரவாள நடையே இயல்பாக வந்திருக்கும். இது போன்ற மணிப்பிரவாள நடை சமக்கிருதத்தைக் கற்றவர்களுக்கு மட்டுமே இயல்பாக வந்தது. தமிழ் மட்டும் தெரிந்தவர்களுக்கு இவை கல்வியை எட்டாக்கனியாக்கின. அதனால்தான் 1967 தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர், இந்த நடையை நீக்கித் தனித்தமிழ் நடையில் பாடநூல்களை எழுதத் தொடங்கினார்கள். திரைப்படங்களிலும் இந்த மணிப்பிரவாள நடை நீங்கி தனித்தமிழ் பீடுநடை போடத் தொடங்கியதைப் பராசக்தி போன்ற படங்களிலிருந்து பார்க்கலாம்.

ஆனால், மணிப்பிரவாள நடை முற்றிலும் ஒழியவில்லை. கற்றவர்கள் தாம் மற்றவர்களைக் காட்டிலும் மேலானவர்கள் என்று காட்டிக் கொள்ள இன்னொரு மொழியைக் கைக்கொண்டார்கள். சமக்கிருதத்தை விட்டுவிட்டு ஆங்கிலத்தைக் கலந்து பேசத் தொடங்கினார்கள். எழுதத் தொடங்கினார்கள். 1970களில் பாலச்சந்தர் படங்களில் கற்ற மேட்டுக்குடித் தலைமாந்தர்கள் முழுக்க முழுக்க (இந்திய) ஆங்கிலத்தில் பேசிவிட்டு உடனடியாக அதைத் தமிழிலும் மொழிபெயர்த்துச் சொல்வார்கள். ஆங்கிலம் அறவே தெரியாத தமிழ் மக்கள் பலருக்கும் தமிழ்ப்படம் புரியவேண்டுமல்லவா, அதனால்தான். அதே நேரத்தில், படித்தவர்கள், பணக்காரர்கள், பெரிய இடம் என்று காட்ட வேண்டுமென்றால் ஆங்கிலம் கலந்து பேச வேண்டும் என்ற கருத்தையும் விதைத்தார்கள்.

இந்தச் சமயத்தில்தான் குமுதமும் விகடனும் தினமணியும் தினமலரும் தமிழில் ஆங்கிலம் கலந்த மணிப்பிரவாள நடையைப் பரவலாக்கின. நுனிநாக்கு ஆங்கில உச்சரிப்பில் ஆங்கிலம் கலந்த தமிங்கிலத்தைப் பேசுவது நளினம் என்று சன் தொலைக்காட்சி போன்ற நிறுவனங்கள் கொண்டாடத் தொடங்கின. அந்த சமயத்தில்தான் இணையத்தில் தமிழ் நுழையத்தொடங்கியது. இணையத்திலும் கணினியிலும் தமிழ் வேரூன்றத் தொடங்கியபோது, கலைச்சொற்களைப் படைக்கத் தொடங்கியவர்களில் தமிழின் நெடிய மரபை அறிந்தவர்களில் சிலரும் இருந்தோம். அதனால்தான் கம்ப்யூட்டர், இன்டர்நெட், வெப் பேஜ் என்று கணியையும் இணையத்தையும் எழுத்தாளர் சுஜாதா அறிமுகப் படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் கணினி, இணையம், வலைப்பக்கம் என்ற கலைச்சொற்களைப் படித்து வெகு இயல்பாக உலவ விட்டுக் கொண்டிருந்தோம். புதிய மணிப்பிரவாளம் வேரூன்றுவதற்கு முன்பு நாங்கள் செய்த தற்காப்புப்பணி இது. முதலில் இத்தகைய மொழிபெயர்ப்புகள் தேவையா, எடுபடுமா என்று ஐயத்தோடு பார்த்த எழுத்தாளர் சுஜாதா, மனம் மாறி, அவரே இந்தத் தனித்தமிழ்க் கலைச்சொற்களை பரப்பவும் செய்தார்.

எனவே கலவைத்தமிழும் மணிப்பிரவாள நடையும் தமிழுக்குப் புதிதல்ல. ஆனால் அவற்றை என்றென்றும் ஆளுமை செய்ய விட்டுத் தமிழை இழக்க விடாமல் காக்க, ஒவ்வொரு தலைமுறையிலும் புதிது புதிதாகச் செயல்வீரர்கள் வந்த வண்ணம் இருந்திருக்கிறார்கள். கலந்து எழுதுவதுதான் முன்னேற்றம், கலவையை மறுப்பது தூய்மைவாதம் என்று சொல்பவர்கள் சமக்கிருதத்தையும், அரபியையும், ஆங்கிலத்தையும் கலந்து எழுத மாட்டார்கள். அப்படி எழுதினாலும் அது வேரூன்றாது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழைத் தமிழாக எழுதப் புதிய எழுத்துகள் தேவையில்லை. அதே போல் தமிழில் ஸ, ஷ, ஹ, ஜ, போன்ற எழுத்துகளைக் கலந்துதான் எழுத வேண்டும் என்ற தேவையும் இல்லை. அருணகிரியின் திருப்புகழையும், வள்ளலாரின் உரைநடையையும் கற்றுக் கொள்ள முனைபவர்களுக்கும், கலவைத் தமிழ்நடையான மணிப்பிரவாள நடையையும் பிறமொழித் தாக்கத்தின் அடையாளமாகக் கற்றுக் கொள்ள வேண்டுபவர்களுக்கும் அவை தேவைப்படலாம். மற்றபடி தமிழைத் தமிழாக எழுதத் தமிழ் எழுத்துகள் மட்டுமே போதுமானவை. அப்படி எழுதுவதைப் பகடி செய்பவர்களுக்குத் தமிழின் மொழிமரபு பற்றித் தெரியாது என்று கடந்து விடலாம்.

வாழும் மொழிகளின் வருங்காலத்தைக் கணிப்பது கடினம். மொழி வளர்ச்சிக்காகத் தம் மொழிமரபை விட்டுக் கொடுத்துக் கலவை மொழியாகித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அப்படிப் பட்ட கலவை மொழிகள் தம் தொன்மையையும் தொடர்ச்சியையும் விட்டுக் கொடுப்பது மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் இப்படிப் பிறமொழி கலந்து பேசி அதிலும் புலமையில்லாமல், தாய்மொழியிலும் கொச்சையாகப் பேசுவதை விட்டுவிட்டுப் பிறமொழியிலேயே பேசிவிடலாமே என்ற எண்ணம் வேரூன்றும்போது இருந்த சுவடே இல்லாமல் மறைந்தொழிந்து போயிவிடும். என்றுமுள்ள தென் தமிழ் நிலைத்து நிற்கும்.

வெள்ளி, செப்டம்பர் 14, 2018

Vengeance of Collective Conscience

The magistrate was used to these late night knocks at his door. That is the price one pays if one is the only authority who can grant last minute stays of execution for the death row convicts. Desperate lawyers would try every trick in the book to keep their clients alive for a few more minutes of their miserable lives.

He folded his lungi in half and threw a towel over his shoulders and walked to the door. It was two in the morning. He sighed. As he opened the door he saw the jail superintendent and a distraught looking young man.

"Sorry for waking you up in the middle of the night your honour. This young man claims to be a professor and a Presidential Scholar at the C. V. Raman institute. He has an incredible story to tell and I need the sound judgement of someone of your calibre to do the right thing."

"Very flattering" said the magistrate. "Come in and make it quick. And it better be good or I am throwing both of you out."

"Pardon me your honor" said the young man. "Sorry for disturbing you this late but you have to stop the execution of the four death row convicts if you want to save the world."

The magistrate was irritated at this lunacy and turned to stare at the superintendent.

"Professor, tell the magistrate what you do at the institute."

"Your honor, I work on a top secret project for the government to communicate with the people in the future and I just had a breakthrough."

The magistrate was getting impatient.

"Sir, your name is bigger than that of King Solomon for the people of the future and you are the symbol of wisdom to them."

"Go on young man, there is only so much flattery one can withstand at this time of the night."

"Sir, the people of the future were desperate to communicate with us. It seems that one of the four convicts will go on to invent a 'Nuclear Quencher' that can extinguish any nuclear bomb, after serving time in the prison.

Supee looked at the magistrate with a quizzical eye.

The professor continued. "All four will serve a life sentence, learn a lot during their jail time and try hard to pay their debt to the society. And they help each other towards this goal."

"And if they are all executed, earth's time line is so warped that a global thermonuclear crisis wipes out the planet."

The magistrate looked at the young man with incredulity.

"Your honor, all lives are interconnected and each has a purpose. Our own beliefs tell us that even asuras had a purpose in God's plan."

"Professor, that may have been true. But don't forget that each of them was killed by the Gods. Our Gods were quite fond of death penalty."

"Your honor, that may be true. But today, you hold the future lives of untold billions humans and other living things in your hand. You just need to stay the execution until I have a chance to convince the appeals court. You need to make the call."

"Can we let the vengeance of collective conscience overcome our humane nature and deny these evil men a chance to reform and actually save billions of lives?"

"You decide" said the professor.

The clock was ticking.

வியாழன், ஆகஸ்ட் 02, 2018

இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்!

நண்பர் முனைவர் நாராயணன் கண்ணன் (Narayanan Kannan) சுவிட்சர்லாந்தில் வாழும் அவருடைய ஈழத்தமிழ் நண்பர் சதீசுடன் சுவிஸ் மலை வெளியில் சுற்றிய போது அலசிய இரண்டு கேள்விகளைப் பற்றி  முகநூலில்  பதிவிட்டிருந்தார். அந்தக் கேள்விகள்:
  1. கடவுள் உண்டா? இல்லையா?
  2. ஆன்மா உண்டா? இல்லையா?
அவரது நண்பர் ஆழச் சிந்தித்து இரண்டிற்கும் இல்லை என்ற முடிவிற்கு வந்திருக்கிறார். அறிவியல் பேராசிரியரான கண்ணன் ஏன் இதில் அவரோடு முரண்படுகிறார் என்பதைப் பற்றிய அலசல் அது.

முனைவர் கண்ணன் நம்மாழ்வார் பாசுரமொன்றை மேற்கோள் காட்டினார்:
உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்
உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்
உளனென விலனென விவைகுண முடைமையில்
உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே.
"அவன் உளன் எனில் காட்சிப்படுத்தக்கூடிய வடிவில் ஸ்தூலமான பிரபஞ்சமாகக் காட்சியளிக்கிறான். அவன் இலன் என்று சொன்னால் அதுவும் சரியே. ஏனெனில் இந்த ஸ்தூலப் பிரபஞ்சத்தின் பின்புலமான உருவற்ற தளமாக அவனே இருக்கிறான். எனவே அவன் உளன்! அவன் இலன் எனும் இரண்டு தன்மைகளையும் கொண்டுள்ளவனாக இருக்கிறான்" என்று பொருள் கொள்கிறார் கண்ணன்.

கிட்டத்தட்ட இதே பொருளில் கம்பனும் யுத்தகாண்டத்தில் இறைவாழ்த்தாகப் பாடியிருப்பார்.
ஒன்றே யென்னின் ஒன்றேயாம்
.... பலவென் றுரைக்கிற் பலவேயாம்
அன்றே யென்னின் அன்றேயாம்
.... ஆமே யென்னின் ஆமேயாம்
இன்றே யென்னின் இன்றேயாம்
.... உளதென் றுரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடிவாழ்க்கை
.... நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா!
அதையொட்டிக் கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலில் நம் காலத்துக்கேற்ற இன்னும் எளிய தமிழில் இப்படி வடித்திருந்தார்:
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை
அவ்வளவுதான்.

இந்த இருத்தலியலை இன்னும் சிறப்பாக இன்னொரு திரைப்படப் பாடலில் செதுக்கியிருப்பார் கண்ணதாசன்.

கடவுளின் இருப்பைக் கேள்வி கேட்கும் ஆணின் குரலில்
இறைவன் இருக்கின்றானா?
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை
என்றிருப்பார். அதற்குப் பெண்குரலில்
மனிதன் இருக்கின்றானா?
மனிதன் இருக்கின்றானா? இறைவன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை
என்று மறுமொழி வரும்.

ஆணின் குரலில் தொடர்ந்து வாழ்க்கையின் முரண்களையும் அபத்தங்களையும் பட்டியலிடுவார்:
பார்ப்பவன் குருடனடி படிப்பவன் மூடனடி
உள்ளதை சொல்பவனே உலகத்தில் பித்தனடி
நீரோ கொதிக்குதடி நெருப்போ குளிருதடி
வெண்மையைக் கருமை என்று கண்ணாடி காட்டுதடி
பெண்ணோ, மனிதனான ஆணின் முரண்பாடுகளைப் பட்டியலிடுவார்:
ஒன்றையே நினைத்திருந்தும் ஒன்றாக வாழ்ந்திருந்தும்
பெண்ணாகப் பிறந்தவரை கண்ணாக யார் நினைத்தார்?
இருந்தால் இருந்த இடம் இல்லையேல் மறந்து விடும்
இவர்தான் மனிதர் என்றால் இயற்கையும் நின்றுவிடும்
முடிவாக ஆணின் குரலில் "கடவுளை மற, மனிதனை நினை" என்ற பெரியாரின் முழக்கத்தை எதிரொலிப்பார்.
சந்தேகம் பிறந்து விட்டால் சத்தியமும் பலிப்பதில்லை
சத்தியத்தைக் காப்பவனும் சாட்சி சொல்ல வருவதில்லை
வழக்கும் முடியவில்லை மனிதரின் தீர்ப்பும் இல்லை
மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவன் இல்லை
உலகின் மிகப்பெரும் அறிஞர்கள், தத்துவ ஞானிகள், அறிவியலார் இந்தக் கேள்விகளை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். ஆனால் கவிஞர்கள் அந்தத் தத்துவங்களைப் பிழிந்தெடுத்து அவற்றின் சாரத்தை நமக்கு ஊட்டி விடுகிறார்கள்.

கடவுளை நம் தாய் தந்தையர் போல் நினைத்து விட்டால் அணுக முடியும். ஆனால், இந்த உலகைவிட, சூரியனை விட, இந்தப் பேரண்டத்தை விடப் பெரிய, அவற்றைப் படைக்கும் ஆற்றல் கொண்ட ஒன்றை நம்மால் கற்பனையிலும் எட்ட முடியாது. நமக்குள்ளே வாழும் கண்ணுக்குத் தெரியாத உயிரினங்களை இப்போதுதான் பார்க்கும் வல்லமையை நாம் இப்போதுதான் எட்டியிருக்கிறோம். அவற்றுக்கு நாம் இருப்பது தெரியுமா? அவை நம்மை வணங்குகின்றனவா? அப்படி வணங்கினால் நமக்குத் தெரியுமா?

இந்தப் பேரண்டத்தைப் பொறுத்த மட்டில் நம் சூரியக்குடும்பமே ஓர் அற்பமான துகள். அதில் நம் உலகமும் நாமும் அற்பத்திலும் அற்பமானவை. பேரண்டத்தையே படைக்கும் வல்லமை பெற்ற ஒரு பேராற்றலுக்கு நம்மைப் பற்றி அக்கறை இருக்கும் என்று நாம் எண்ணுவதே பேராசை. அந்தப் பேராற்றல் நம்மைத் தாய்ப்பூனை போல் அள்ளிக் கொண்டு போகும் என்று நினைப்பது கடவுளைத் தாய் போல் கருதும் ஒரு நல்ல கனவு. அதே நேரத்தில் அந்தக் கடவுளைக் குரங்குக் குட்டி போல் நாம் பற்றிக் கொண்டால் நம் தந்தை போல் அது நம்மைக் காப்பாற்றி விடும் என்பதும் இன்னொரு நல்ல கனவு. உண்மையில் அந்தப் பேராற்றலுக்கு, கடவுளுக்கு நம்மைப் பற்றி எந்த அக்கறை இருந்தாலும் அதுவே பெருங்கருணைதான்.

உண்மையில் அப்படிப்பட்ட பேராற்றலிடம் நாம் என்னதான் வேண்ட முடியும்? அப்படிப்பட்ட வேண்டுதல்களுக்குப் பயனிருந்தாலும் இல்லாவிட்டாலும் கடலினும், மலையினும், ஞாலத்தினும் மாணப் பெரிய பேராற்றலிடம் என்ன பேரம் பேச முடியும்? நம் தேங்காய்க்கும் வாழைப்பழத்துக்குமா அந்தப் பேராற்றல் காத்துக் கொண்டிருக்கும்?
கடவுள் பற்றிச் சில ஆண்டுகளுக்கு முன்பு நான் புழைக்கடைப் பக்கத்தில் கிறுக்கியது நினைவுக்கு வருகிறது. ( https://kural.blogspot.com/2013/02/blog-post_9.html ) இந்தப் பேரண்டத்தின் அலகிலா விளையாட்டில் நாமும் ஒரு சிறு துகள். கம்பனின் சொல்லில்:
"உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையான் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே "
அலகிலா விளையாட்டு. அவ்வளவே. தில்லைக் கூத்தர் ஏன் ஆடுகிறார்? இந்த அண்டங்களும், அணுக்குள் இருக்கும் துகள்களும் ஏன் ஆடிக் கொண்டிருக்கின்றன. அலகிலா விளையாட்டு. ஆக்கலும் அழித்தலும் இந்த விளையாட்டில் ஒரு பங்கு. அவ்வளவே.

இந்தப் பேரண்டமும், அதற்கும் வெளியில் இருக்கும் பற்பலப் பேரண்டங்களும் நம் கற்பனைக்கும் எட்டாத பெருவெளிகள்.

அதைக் கடவுள் என்று சொல்லலாமா?

ஏன் சொல்லக்கூடாது?

ஆனால் அந்தக் கடவுள் உண்டி குலுக்காது. ஊர்வலம் வராது. தேங்காய், பழத்தை எதிர்பார்க்காது. நம் வேண்டுதல்களைக் கேட்கும் என்றும் எதிர்பார்க்கக்கூடாது.  சாமியார்கள், பூசாரிகள், முல்லாக்கள், பாதிரிகள் எல்லோரும் அவரவர் பார்வையில் ஏதோ செய்கிறதைப் பற்றி அதற்குக் கவலையிருக்காது. நமது அணுக்குண்டுகள் குழந்தைகளைக் கொல்வதும் அதற்கு அலகிலா விளையாட்டுதான். நிலை பெறுத்தலும் நீக்கலும் அதன் தன்மைக்குள் அடங்கி விடும். இதனோடு என்ன பேரம் பேச முடியும்?

கடவுள் இருந்தாலும் இல்லையென்றாலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்ற புத்தரின் கொள்கை நினைவுக்கு வருகிறது. வலியோர் எளியோரை வதை செய்து உண்ணும் உலகில் மனிதர்கள் மட்டும் ஓரளவுக்கு ஒரு மாற்றை உருவாக்க முயன்று அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம். அந்த வெற்றிக்குக் கடவுள் என்ற கற்பனை உதவியிருக்கிறது என்றும் சொல்லலாம்.

ஆன்மா என்ற கற்பனை கடவுள் என்ற கற்பனைக்கும் மேலாக மனிதனைப் பண்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்த பிறவியில் உனக்கு வாழைத்தோப்பையே தருகிறேன் என்றால் எந்தக் குரங்கும் ஏற்றுக் கொள்ளாது.  ஆனால் மனிதர்களில் பலர் மறுபிறவியில் ஊழ்வினை வந்து துன்புறுத்தக்கூடாது என்று பேரம் பேசுகிறார்கள். ஆன்மா என்ற கற்பிதம் அதற்கு உதவியிருக்கிறது.
 
கடவுள் இல்லை, ஆன்மா இல்லை என்றெண்ணிப் பிறருக்கு எப்போதும் நன்மை செய்வோம். கடவுள் இருக்கிறார், ஆன்மா இருக்கிறது என்றெண்ணிப் பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருப்போம்.

இன்றே யென்னின் இன்றேயாம்
.... உளதென் றுரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடிவாழ்க்கை
.... நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா!

https://www.youtube.com/watch?v=Qsf4NJ5JNH4

செவ்வாய், பிப்ரவரி 17, 2015

Even if a single man goes hungry, raged poet Bharathi, let us destroy the universe!

My train was late. I am upset. But not because the train was late. I wouldn't have cared if the train had been a day late if only.... I think it was a boy, perhaps a young man, a teenager. He may have been hiding from the Train Ticket Examiner in the toilet. In any event, he came out after an hour or so; right outside the TTE's seat, and fell on the floor with his face down. People thought perhaps he was faking it to escape the TTE. Or may be he was hungry. It was at the Viruthachalam Junction station and the train had just stopped. As usual there was a crowd milling around him to figure out what was going on. The TTEs were in another compartment. Someone called them. I was worried if he was sick with some contagious disease. I was worried if it was safe for that many people to be in close contact with him. And a lot of them were also from my own compartment and my seat was just four rows from him.
The train was supposed to halt for about a minute. But they held the train. It was after 7 PM and there was no doctor on duty at the station. Perhaps there was no doctor on the train according to the records. TTEs sent out folks calling for volunteer medical professionals who could help. The boy lifted his head after someone sprinkled water on his face. They wanted to know if he was starving and wanted to eat. He said no. They thought he was a Marathi. Another person went out looking for a Marathi speaker.
Finally someone from the train, a doctor, volunteered to look at him. The train was really late. The doctor came. By the time he came the pulse was feeble. He asked for an ambulance. The duty station master and the railway police called for an ambulance. It took them a while to come. Viruthachalam is a small town. They took the boy away. The train finally left the station. It was late by about an hour.
I was worried. I connected to the internet to see how late it will be to reach my station. I worried about the possibility of a contagious disease. I worried about the procedure in handling an emergency in railways. The Indian railways site said the train would be only 47 minutes late to reach my station. I didn't mind ... if only they were able to save that boy.
Before we reached the next station, the TTEs got a message from the station master of Viruthachalam. The boy died on the way to the hospital.
We were in the middle of an animated discussion among the train passengers on politics, election, environment, labor and pollution. When we heard that the boy had died, I was speechless. He was too young to die. What dreams he must have had, his parents may have had. May be he was a low class laborer. But in a country where a chaiwalla can become a prime minister, what was there to stop him. But now those dreams had vanished.
But what killed him? I was curious. Did he die of a contagious disease? Are we at risk? I went to the TTE to ask. Perhaps the TTEs thought I looked like a responsible person and not a busybody trolling for gossip. They told me that they had spoken with the boy when he was alive.
Apparently he spoke some Tamil. He was a north Indian. But he said, in Tamil, that he was an anaathai, an orphan. He added that he had kidney trouble. He had a scar on his body, indicating a recent surgery. The TTE couldn't stop talking about how fair skinned and handsome the boy was. May be was a runaway. May be he was an orphan. May be he was a laborer. But now he is dead. The TTEs had an instruction to look for abandoned bags in the train that may contain some identification. There were none on his person. No wallet, no ID, no ticket, nothing. He was clean of any possessions. They didn't know his name. Nor could they notify any relatives. He died alone and remained anonymous. I was aghast.
That was really strange I thought. Was he a victim of a crime? Did someone steal a kidney from him and left him to die on the train? I am determined to write to the authorities not to dismiss this as a death by natural causes. If there are criminals behind this death, they ought to be caught. Otherwise, they will be still roaming around looking for the next victim.
And what about the industries that thrive on child labor? And those immigrants who cannot speak Tamil and have no relatives or service organizations to worry about them?
And why can't the railways have a doctor in each junction at least? Or like the TTE said, have agreements with the private hospitals or the government hospitals to provide emergency care. There ought to be at least first aid care and paramedics at each station. If they had taken the boy to an emergency care within 30 minutes, they may have been able to save him.
Millions of people travel by the trains in India. The tickets are dirt cheap. They could increase the price of the ticket to pay for this service. It will be worth it.

By sharing this painful experience I am hoping that we will be thinking about what to do in an emergency like this.  I can only think about what might have happened in an American train had I witnessed a similar incident there.  While they may have gotten overboard and brought in a flying emergency room in a helicopter, they would have done everything to save a life - even that of a homeless person. I don't see why India cannot handle emergencies on a train even if the Indian railways handle millions of passengers every day. Because of sheer size of Indian population, we tend to see such deaths as mere statistics and not something that happens to real people unless we knew them personally.  They are no longer shocking.  We have become immune to such things, like the street beggars or the homeless on the Indian street or the transgenders begging in a train.

But I didn't want this boy to go unmourned, even if we don't know his name.  I still cannot forget the boy's face. Oh my, he was so young. Life is so fickle. May he rest in peace. At least now. 
frown உணர்ச்சிலை

செவ்வாய், மே 13, 2014

அறிவியலைப் பற்றி அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பத்து செய்திகள்

10. இயற்கை நடப்புகளை அறிவியல் பகுத்தறிவு ஆய்வின் மூலமாகவும், ஏரண (தர்க்க/லாஜிக்) அலசல்கள் மூலமாகவும் மட்டுமே வெற்றிகரமாக விளக்குகிறது. மூடநம்பிக்கைகளையோ, மாய மந்திரங்களையோ அது சார்ந்திருக்கவில்லை.

9. அறிவியலில் கருத்து வேறுபாடுகள் எழும்போது, இறுதி முடிவுகள் ஏதாவது ஒரு வல்லுநரின் கருத்தையோ, பொதுவுணர்வையோ பொருத்து அமையாமல், சோதனைகளின் மூலம் வரும் தரவுகள் மற்றும் அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே அமையும்.

8. அறிவியல் கோட்பாடுகள் ஊகங்களல்ல. அவை இயற்கையில் நாம் ஏற்கனவே கண்டுபிடித்துள்ள தரவுச்செய்திகளை விளக்க வல்ல கறாரான ஏரண முயற்சிகள் மட்டுமல்லாமல் இனிமேலும் நாம்  கண்டுபிடிக்கப் போகும் தரவுச் செய்திகளையும் தொலைநோக்குடன் முன்னறிவிக்கக்கூடியவை.

7. ஒரு கோட்பாட்டின் முன்னறிவிப்புகள் உறுதியானபின்னால், அது அறிவியலின் இன்றியமையாத கருவியாகி விடுகிறது என்றாலும் நல்ல கோட்பாடுகளும் வருங்காலத்தில் அவற்றை விடப் பரந்துபட்ட, நுணுக்கமான கோட்பாடுகளுக்கு வழி விட வேண்டிவரலாம்.

6. இந்தப் பேரண்டம் பரந்து விரிந்தது; மிகத் தொன்மையானது; நம் சூரியன் நமக்கு அருகிலிருக்கும் (பால்வெளிப்பாதை) நட்சத்திர மண்டலத்திலுள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் ஒன்று; இதே போலப் பல கோடி நட்சத்திர மண்டலங்கள் பேரண்ட வெளியின் மூலைமுடுக்கிலெல்லாம் பரவியிருக்கின்றன.

5. உயிரினங்கள் இந்தப் பல கோடி ஆண்டுகளில் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. எளிமையான முன்னோடிகளிலிருந்து தொடங்க்ப் படிப்படியாக வளர்ந்து விரிந்திருக்கும் இந்த உயிரினங்களின் ஒரு கிளைதான் மனித உயிர்கள். இவை அனைத்துமே ஒரே மாதிரியான மூலக்கூறு எந்திரங்களின் இயக்கத்தால் வாழும் உயிர்கள்தாம்.

4. ஐன்ஸ்டைன் காட்டியது போல நாம் அன்றாட வாழ்வில் காணும் நேரமும் வெளியும் எல்லா வேகங்களுக்கும் எல்லா வெளிப்புலங்களுக்கும் பொருந்துவதில்லை.

3. அணுவெளியின் குற்றுலகமும், அதையும் விடச் சிறிய புலங்களும், குற்றளவை (குவாண்டம்) விதிகளைப் பின்பற்றி இயங்குபவை; இவை பொதுவுணர்வில் நாம் அறிந்தவைக்கு முரணானவை; செயலும் விளைவுகளும், நடப்பு என்று நாம் அறிவதுவும் அந்த அளவில் தெளிவில்லாமல் இருப்பவை.

2. ஒரு பொருள் இயங்குவது பெரும்பாலும் அது தன்னோடு பிணைந்திருக்கும் ஏனைய பொருள்களின் இணைப்புகள், செயல்பாடுகளைப் பொருத்து அமையும்; மூளையின் உயிரணுப் பிணைப்புகள், உடலின் மற்ற உறுப்புகள் முதல் சூழல் பிணையங்கள், பொருளாதார அமைப்புகள் மற்றும் மனிதர்களின் உறவாடல்கள், சமூக அமைப்புகள் என்று எல்லாவற்றுக்குமே இந்த விதி பொருந்தும்.

1. அறிவியலில் வெகுசிலவே திட்டவட்டமாக உறுதியானவை; ஆனால் பெரும்பாலானவை பெரிதும் நேரிடக் கூடியவை; எது உண்மை என்று அறிய இத்தகைய நேர்ச்சிகளைத் தக்க முறையில் அளவிட வேண்டும்; எடுக்கக்கூடிய முடிவுகளும் நடக்கும் என்று கருதக்கூடிய செயல்களும் இத்தகைய அளவீடுகளைப் பொருத்தே அமையும்.

ஆங்கில மூலம்:

ஞாயிறு, நவம்பர் 10, 2013

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - ஒரு கோணல் பார்வை - பகுதி 2


தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் செய்வது கிட்டத்தட்ட ஒரு குடிசைத் தொழிலாகி விட்டது. இதை நையாண்டி செய்து நான்  மார்ச் 2, 2010ல் ஒரு வலைப்பூவைப் பதிந்தேன். அப்போது எழுத்தாளர் பேரா. இந்திரா பார்த்தசாரதி நகைச்சுவையுடன் ”விளையாட்டுக்குக்கூட இப்படிச் செய்யாதீர்கள். செம்மொழி மாநாட்டில் தீர்மானம் போட்டு ஏற்றுக் கொண்டு விடப் போகிறார்கள்” என்று எச்சரித்தார்! அண்மையில் நான் கிண்டல் செய்ததைப் போலவே ஒரு எழுத்துச் சீர்திருத்த முன்மொழிவு கண்ணில் பட்டது. முதலில் எனது கோணல் பார்வை உங்கள் கண்ணுக்கு:

http://kural.blogspot.com/2010/03/blog-post.html


எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் மக்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்! எழுத்துகள் இன்றைய நிலையை அடைய எத்தனை நூற்றாண்டுகள் ஆகின, என்னென்ன பிழைகளைக் கடந்து படிப்படியாக இந்த நிலையை அடைந்தன என்பதைப் பற்றி இவர்கள் எண்ணுவதே இல்லை. யூனிகோடு குறியீட்டுமுறை வந்து இன்னும் 25 ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால், தொடக்கத்தில் இருந்தே அவர்கள் நிலை பிறழாமையை (stability principle) ஒரு குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கணினிக் குறியீட்டுக்கே இது தேவை என்றால் மனிதர் மொழிக்கு எவ்வளவு தேவை?

இதோ நான் கிண்டல் அடித்தது போன்ற புதிய பரிந்துரைகள் (அவை எனதல்ல!)






இதோ மேற்கண்ட குறியீட்டில் உள்ள ஓர் ஆவணம்:





திங்கள், ஜூலை 29, 2013

சொற்கள், வெறும் சொற்கள், இவைக்கு இத்தனை வலிமையா!


தமிழ் இணையத்தின் தொடக்க நாட்களில், தமிழ்.நெட் மடலாடற்குழுவில் காரசாரமான விவாதங்கள் நடக்கும். தாய்த்தமிழகத்திலும்,  தமிழ் ஈழத்திலும் இணையம் அவ்வளவாகப் பரவாத காலம் அது.  உலகெங்கும் பரந்து விரிந்திருந்த புலம்பெயர்ந்த தமிழர்கள்தாம் பெரும்பாலும் இணையத்தில் தமிழில் எழுதிக் கொண்டிருந்த நாட்கள். ளும், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் விழுதுகள் பதித்திருந்த தமிழர்களோடு, புதிதாகக் கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் குடிபுகுந்திருந்த தமிழர்களும் தாய்த்தமிழகம், தமிழ் ஈழச் சூழல்களைப் பற்றியும், புலம்பெயர்ந்த நாடுகளில் தமக்கிருந்த சிக்கல்களைப் பற்றியும் எழுதத் தொடங்கியிருந்த நேரம்.

நம்மில் பெரும்பாலோர் முகம் தெரியாத மனிதர்களோடு, பண்பாட்டுடன் அளவளாவதில் தொடங்குகிறோம்.  தமிழ் இணையத்தின் அன்றைய பரப்பு மிகவும் சிறியது என்பதால் முகம் தெரியாதவர்களும் அந்நியர்களாகத் தோன்றாமல், இணையத்தில் பக்கத்து வீட்டார் போலத்தான் இருந்தார்கள்.  இருப்பினும், மென்மையாகத் தொடங்கும் வாதங்கள், இணையத்தின் முகமூடித் தன்மையினால், இறுகத் தொடங்கி வன்மையாக மாறத் தொடங்கின.  இன்று முகநூலில் பரந்து காணப்படும் வசைச்சொற்களும், தனிமனிதத் தாக்குதலும், எட்டிப் பார்க்கத் தொடங்கின.  தமிழ்.நெட்டின் நிறுவனர் பாலா பிள்ளையைப் பொருத்தவரையில் கருத்துச் சுதந்திரத்துக்கு வேலிகளே இல்லை.  இணையத்தில் எதை வேண்டுமானாலும் எழுத முடிய வேண்டும் என்று உறுதியாக நம்பினார்.  அந்த ஊக்கத்தால், வாக்குவாதங்களில் புண்படுத்தும் சொற்கள் வந்து விழத் தொடங்கின.

ஒரு முறை அப்படிச் சொற்கள் கரைபுரண்டு காட்டாற்று வெள்ளமாக ஓடத் தொடங்கிய போது மலைத்துப் போய் பின் வரும் “கவிதை” ஒன்றை எழுதினேன்.  அது தமிழ் இணையத் தளங்களின் முன்னோடியாக விளங்கிய தமிழ்நேஷன்.ஆர்க் தளத்தின் நிறுவனரான நடேசன் சத்தியேந்திராவை மிகவும் ஈர்த்தது.  அப்போது அவர் தம் தளத்தில் முகப்பில் எதிரொளிகள் (Reflections) என்ற தலைப்பில் இணையத்தில் தம்மைக் கவர்ந்த கருத்துகளைப் பதிவு செய்வார்.  இந்தக் கவிதையையும் அவர் ஆகஸ்டு 1, 1998ல் தம் முகப்பில் பதிவு செய்திருந்தார். இந்தத் தளம் ஏதோ காரணங்களால் சில முறை முடங்கியிருந்து இப்போது முற்றிலும் நின்று விட்டது.  ஆனால், அதன் பதிப்புகளை எப்படியோ மீட்டெடுத்து இன்றும் அவற்றைப் பார்வையிடும் வகையில் tamilnation.co என்ற தளத்தில் ஓர் அருங்காட்சியகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதில், இந்தக் கவிதையை இன்றும் பார்க்கலாம்.

சொற்கள் - 1 ஆகஸ்டு 1998

சொற்கள்,
வெறும் சொற்கள்,
இவைக்கு இத்தனை வலிமையா?

கொந்தளிக்கும் உணர்ச்சிகள்
கொதிக்கின்ற குருதி!

சொற்கள்,
வெறும் சொற்கள்,
இவைக்கு இத்தனை வலிமையா?

பத்திரிக்கை விற்க வேண்டும்,
(மக்கள்) பரபரப்பாய்ப் படிக்க வேண்டும்,
பொறுமை இழக்க வேண்டும்,
பொங்கி எழ வேண்டும்,
போர்க்கோலம் பூள வேண்டும்.

கடுஞ்சொல் வீச வேண்டும்!
கல்லை எறிய வேண்டும்!
கொடிதான் பிடிக்க வேண்டும்!
கொந்தளித்து எழ வேண்டும்!

சொற்கள்,
வெறும் சொற்கள்,
இவைக்கு இத்தனை வலிமையா?

கருத்துச் சந்தையிலே
கற்பை விற்பவர்கள்
கொள்கைக் குழப்பத்திலே
கொள்ளிமீன் பிடிப்பார்கள்

கருத்தை வடிகட்டு;.
கசட்டைத் தூற எறி.
கண்ணியம் இழக்காதே,
கயவனாய் மாறாதே.
சொற்கள்,
வெறும் சொற்கள்,
இவைக்கு இத்தனை வலிமையா?

- மணி மு. மணிவண்ணன்
·பிரிமான்ட், கலி·போர்னியா, அ.கூ.நா.
Mani M. Manivannan- California, USA

ஞாயிறு, ஜூலை 28, 2013

”அபுனைவு” என்பது புனைவுக்கு எதிர்மறைச் சொல்லா?

அண்மையில் "non-fiction" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் ”அபுனைவு” என்று எழுதுவதைப் பார்க்கிறேன்.  கவிஞர் ஹரிகிருஷ்ணன் இது அவருக்குத் தெரிந்து சுமார் இருபதாண்டுகளாகச் சிறு பத்திரிகைகளில் வெளிவந்து, ‘இலக்கியவாதிகள்’ மத்தியில் பரவலாகவும் புழங்குகிறது என்கிறார். 

Fiction என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் புனைவு என்ற சொல்லைப் புழங்கி வருகிறார்கள் எனத் தெரியும்.  ஆனால், புனைவுக்கு எதிர்மறைச் சொல்லாக, அதன் முன் அகர முன்னொட்டு இட்டு ‘அபுனைவு’ என்று சொல்லுவது தமிழின் மரபு இல்லை.  இப்படி அகர முன்னொட்டு இட்டு எதிர்மறையாக்குவது சமஸ்கிருதத்தின் மரபு.  

bhayaabhaya
pūrvaapūrva
maṅgalaamaṅgala
mārgaamārga

அமரர் என்ற சொல்லும் இப்படித்தான் மரணமற்றவர்கள் என்ற பொருள்தரும் வடசொல் வேரிலிருந்து வந்தது.

ஆங்கிலத்திலும் இதே போன்ற மரபு உண்டு.
chromaticachromatic
morphousamorphous
symmetricasymmetric
typicalatypical

இவை பெரும்பாலும் கிரேக்க வேர்ச்சொற்களில் இருந்து வந்தவை.  ஆனால், சென்னைப் பேரகரமுதலியில் தேடிப்பார்த்தால், இந்த அகர எதிர்மறை முன்னொட்டு எந்தத் தமிழ் வேர்ச்சொல்லின் முன்னும் இல்லை. ‘அபு’ என்று தொடங்கும் சொற்கள் மூன்று மட்டுமே. (
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.0.tamillex.950993.951293). அவை
:

*அபுத்திபூருவம் aputti-pūruvam, n. < a- buddhi-pūrva. That which is unintentional; அறியாமல் நிகழ்ந்தது

*அபுத்திரகன் a-puttirakaṉ, n. < a-put- raka. One without male issue; புத்திரனைப் பெறாதவன்.

*அபுதன் aputaṉ, n. < a-budha. Fool, dolt: மூடன்.

இந்த மூன்றும் வடசொற்கள்.

அபுனைவு என்ற சொல்லை எப்படி உச்சரிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. புனைவு என்பதில் பகரம் வல்லொலி.  அபுனைவு என்பது தமிழாகவே தெரியவில்லை.  இருப்பினும் அதைப் படிக்கும்போது  abunaivu என்று மெலிந்து ஒலிக்கத்தான் தோன்றுகிறது.  அதை அ-புனைவு என்று இடைவெளி விட்டுப் படிப்பதும் மரபல்ல.

தமிழில் எதிர்மறைகள் பின்னொட்டு வழியாகத்தான் வருபவை.  சென்னைப் பல்கலைப் பேரகராதியில் “அபு” என்று தொடங்கும் சொற்கள் எவையும் இல்லை என்பதே இதன் தொன்மையான மரபைக் காட்டுகிறது.

பிராமணர் அல்லாதவர் என்பதைக் குறிப்பிட “அபிராமணர்” என்றா சொல்லுவீர்கள் என்று ஒரு எழுத்தாள நண்பரிடம் கேட்டபோது அவர்கள் வீட்டில் அப்படித்தான் சொல்வார்கள் என்று சொன்னார். அதை அபிராமணர் என்று உச்சரிக்காமல் ‘அப்ராமணர்’ என்று உச்சரிக்க வேண்டும் என்று விளக்கினார் ஹரி.  அதாவது

bhrāmanabhrāman

தமிழில் அபிராமணர் என்று சொல்ல முடியாது.  அப்பிராமணர் என்றால் அது அந்தப் பிராமணர் என்றுதான் பொருள்தரும். இது நிச்சயம் தமிழல்ல

பிராணிக்கு எதிர்மறை அபிராணியா?  அதை அப்பிராணி என்றா சொல்வார்கள்? அப்படிச் சொன்னால், அதை அந்தப் பிராணி என்றல்லவா புரிந்து கொள்ள நேரிடும்?

Non-Congress, non-Communist என்பவற்றை அகாங்கிரஸ் கட்சி, அகம்யூனிஸ்ட் என்று சொன்னால் தலை சுற்றவில்லையா? Non-payment க்கு அகட்டணம் என்று சொல்லிப்பாருங்கள்!

புனைவு என்ற சொல்லுக்கு அபுனைவு என்று எதிர்மறைச்சொல் படைத்தவர்களுக்குத் தமிழும் தெரியவில்லை, வடமொழியும் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  இப்படி ஒரு மொழியின் அடிப்படை இலக்கணமே தெரியாமல் சொற்களைப் புனைபவர்களும், அதை எடுத்து ஆள்பவர்களூம்தான் இன்று இலக்கியவாதிகள். காப்பியைக் குளம்பி என்று தமிழ்ப்புலவர்கள் அழைத்தால் நக்கலடிக்கும் அதே இலக்கியவாதிகள் இப்படித் தமிழும் தெரியாமல் வடமொழியும் தெரியாமல் அபுனைவு என்று படைப்பதைப் பார்த்தால், மாமியார் உடைத்த ‘மண்குடம்’ என்பதுதான் நினைவுக்கு வருகிறது.
 

பெயர்ச்சொல்லுக்கு முன் அ- முன்னொட்டை இட்டு அதை எதிர்மறையாக மாற்றுவது ஆங்கிலத்துக்கும் வடமொழிக்கும் இலக்கண முறையாக இருக்கலாம்.  இரவற்சொற்களில் கூட இவை எடுத்தாளப் படலாம்.  ஆனால் தமிழ்ச்சொல்லுக்கு இவை பொருந்துமா?

இலக்கணம் மாறுகிறதே!
புனைவுக்கு எதிர்ச்சொல்லாக புனைவிலி என்று ஒரு ஆட்சியைப் பார்த்தேன். தாழ்வில்லை. இது பற்றிப் பேரா. செல்வகுமாரின் தமிழ்மன்றம் மடலாடற்குழுவில் உரையாடினோம். (காண்க: 
https://groups.google.com/forum/#!topic/tamilmanram/XMnHR-o4bWk )

புனைவறு’ என்று எழுதுவேன் என்று நாக. இளங்கோவன் சொல்கிறார். ‘அல்’ என்ற முன்னொட்டை இட்டு அல்புனைவு என்றும் சொல்லலாமே என்கிறார்.  பேரா. செல்வகுமார் அல்புனை என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறார்.  அல் முன்னொட்டுப் பல தமிழ்ச்சொற்களில் பயின்று வருகிறது என்று சுட்டுகிறார்.
தமிழில் இப்படி அபுனைவு என்பது கசப்பாகவே உள்ளது.
ஆனால் தமிழில் 
அல்வழி (வேற்றுமையல்லாத வழி, தகாத வழி)
அல்வழக்கு,
அல்லியன் (குழுவைப் பிரிந்த யானை),
அல்லிப்பிஞ்சு (பூவிழாத பிஞ்சு )
அல்லும்பகலும் என்னும் சொல்லாட்சியில் அல் என்பது இரவு (கதிரவனின் பகல் வெளிச்சம் இல்லாதது).
இனும் பல சொற்கள் உள்ளன. ஆகவே அல் என்னும் முன்னொட்டுடன் வரும் தமிழில். 

அல்லங்காடி என்ற சொல் மாலையில் கூடும் சந்தையைச் சுட்டுகிறது என்பது நினைவுக்கு வருகிறது.  ஆனால், அங்கே அல் என்பது இருளையும், இரவையும் சுட்டுகிறது.  அங்காடி அல்லாதது என்று சொல்லவில்லை.  எனவே அல் என்ற முன்னொட்டு எல்லா இடங்களிலும் பொருந்தாது என்றும் புரிகிறது.

இராமகி சொல்கிறார்:
அல்புனைவு என்று சொல்லலாம்; குழப்பம் வராது. தமிழிற் பெரும்பாலும் பின்னொட்டுக்களே பயிலும். அரிதாகவே முன்னொட்டுக்கள் பயின்று பார்த்திருக்கிறேன். அல் என்பது அப்படி ஓர் முன்னொட்டாகும். முதலிற் சொல்லும்போது முன்னொட்டாய் வைத்து இப்படிச் சொல்லத் தயங்கினேன். பின்னால் கொஞ்சங் கொஞ்சமாய் நான் ஏற்றுக் கொண்டுவிட்டேன். ஏனென்றால் 
”அல்வழி யெல்லாம் உறழென மொழிப” - தொல்.எழுத்து.புள்ளி 73;“அறனை நினைப்பானை யல்பொருள் அஞ்சும்” - திரிகடுகம் 72.“அல்வழக்கு ஒன்றுமில்லா அணிகோட்டியர்கோன் - திவ். திருப்பல்.11. ”அல்லறஞ் செய்வோர் அருநரகு அடைதலும்” - மணிமே. 16:89”அழுக்காற்றின் அல்லவை செய்யார்” - குறள் 164“அல்லுழியெல்லாம் பரந்துபட்டு வரவும் பெறும்” - தொல்.பொருள்.செய்.183. பேரா.உரை   என்ற முன்னோர் காட்டுக்கள் இருக்கின்றன. இந்தச் சிந்தனையிற் தோய்ந்தே ”அத்வைதம்” என்பதற்கு ”அல்லிருமை” என்ற இணைச்சொல்லை நான் ஏற்கனவே பரிந்துரைத்தேன்.
புனைவிலி என்பது புனைவே இல்லாதது (no imagination) என்றாகும்; அதனால் “முற்றிலும் உள்ளமை (totally real) என்ற பொருட்பாடு வந்துவிடும். Non-fiction என்பது இதுவல்ல. அது கதையல்லாதது; எனவே வேறொரு வகையைக் குறிக்கும்.
இல்ல, அல்ல என்ற இருவகைக் கருத்துக்களுக்கும் உள்ள பொருள் வேறுபாட்டை இங்கு நுண்ணி எண்ணிப் பார்க்கவேண்டும். இல்லுதலும், அல்லுதலும் வேறு வேறானவை.
அல்புனைவோ அல்லது அல்புனையோ இவ்விரண்டுமே அபுனைவை விட மேலானவை. கொட்டைவடிநீர், குளம்பி, மூத்த குரங்கு தமிழ்க்குரங்கு என்றெல்லாம் தமிழ்ப்புலவர்களை நக்கலடிக்கும் ‘இலக்கியவாதிகள்’ அபுனைவு என்று தாம் படைத்தது தவறு என்று ஏற்றுக் கொண்டு அல்புனைவு சரி என்று ஏற்றுக்கொண்டு தாம் அறிவு நேர்மை உடையவர்கள் என்று உறுதி செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு. 

செய்வார்களா? “இலக்கியவாதிகள்” செய்யாவிட்டாலும் தாழ்வில்லை.  தமிழைப் பற்றி அக்கறையுள்ளவர்களாவது செய்யலாமே?

சனி, ஜூலை 27, 2013

கலைச்சொற்களும் கொலைச்சொற்களும்

தமிழகத் தொலைக்காட்சிகளைப் பார்க்கும்போதும், வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும்போதும் அன்றாடத் தமிழ்ப் பேச்சில் ஆங்கிலம் எவ்வளவு கலந்திருக்கிறது என்பதை உணரலாம்.  1970கள் வரைக்கூட இந்த நிலை இல்லை.  அப்போதைய கே. பாலச்சந்தர் படங்களில் மேட்டுக்குடிப் பாத்திரங்கள் மட்டுமே ஆங்கிலம் கலந்து பேசுவார்கள்.  ஆனாலும் மேஜர் சுந்தரராஜன் நடித்த பாத்திரங்களில் அவர் ஆங்கிலத்தில் பேசியதை உடனேயே தமிழில் மொழி பெயர்த்து விடுவார்.  இல்லையென்றால் படம் பார்ப்பவர்களில் பெரும்பாலோருக்குக் கதை புரியாமல் போய் விடும்.

ஆனால், இன்றைய நிலையில், தொலைக்காட்சிச் செய்திகளில் கூட, தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் சிற்றூர்களில் உள்ள மூதாட்டிகள் கூடத் தமக்கும் ஆங்கிலம் தெரியும் என்று காட்டிக் கொள்ள எதையாவது கலந்து பேசுகிறார்கள். வடநாட்டிலிருந்து இறக்குமதி ஆகியிருக்கும் நடிகைகளுக்காவது உண்மையிலேயே தமிழ் தெரியாது.  எனவே அவர்கள் ஆங்கிலம் கலந்து பேசுவதைப் பொறுத்துக் கொள்ளலாம்.  ஆனால், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த அறிவிப்பாளர்களுக்கும் கூட “நான் பிறந்திருக்க வேண்டியது இங்க்லேண்ட்” என்ற உணர்வு போலும்.

மிகப் பெரும்பாலான அறிவிப்பாளர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.  அது அவர்கள் பிழையல்ல.  ஆங்கிலம் நம் தாய்மொழி இல்லையே?  அதை இரண்டாவது மொழியாகத்தான் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.  ஆனால் தாய்மொழியையும் கற்றுக் கொள்ளாவிட்டால், நமக்கு எந்த மொழியுமே முதல்மொழியாக இல்லாமல் போய்விடும்.  இதனால்தான், எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், அது வரும்போதே அது குறிப்பிடும் கலைச்சொற்களைப் புரிந்து கொண்டு, நம்முடையதாக்கி, நம் மொழியில் பெயரிட வேண்டும்.  அதன் ஆளுமையே தனிதான்.  இன்று பட்டி தொட்டி எல்லாமே “இணையம்” என்ற சொல் பரவி இருப்பதே இத்தகைய ஆளுமைக்கு எடுத்துக்காட்டு.

தமிழ் இணையத்தின் தொடக்க காலத்தில், தமிழ்.நெட் (tamil@tamil.net) என்ற மடலாடற்குழுவில்தான் இணையத்தில் தமிழைப் புழங்கிய அத்தனை பேரும் இருந்தோம்.  அங்கேதான் “இணையம்” என்ற சொல்லும் படைக்கப் பட்டது.  அதன் பின்னர் தமிழ்.நெட்டில் இருந்து கிளைத்த சில குழுக்களில் சிறப்பான கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன.  அவற்றில் அகத்தியர் குழுமம் தலையாயது.

ஒருமுறை, செப்டம்பர் 1999ல், செல்ஃபோன், பேஜர் என்ற ஆங்கிலச்சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொல் ஒன்று பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.  1989ல், சிங்கப்பூர் முஸ்தஃபா கடையில், அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தமிழ் முஸ்லிம்களிடம் இருந்துதான் அகவி என்றால் பேஜர் என்றும், கைப்பேசி என்றால் கார்ட்லெஸ் ஃபோன் என்றும் தெரிந்து கொண்டேன்.  அவர்கள் யாரும் தமிழ்ப் புலவர்களல்லர்.  ஆனால், இந்த அந்நியப் பொருள்களை அவர்கள் தமிழில் பெயர்சூட்டி அழைக்கத் தயங்கவில்லை.  ஆங்கில மோகம் சிங்கப்பூரை அப்போது எட்டவில்லை போலும்.

ஆனால், அகவி, கைப்பேசி, செல்பேசி (மொபைல் ஃபோன்), செல்லிடைபேசி போன்ற பெயர்களைத் தமிழகத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்கினார்கள்.  அந்த உரையாடலில் இந்தப் பெயர்களை ஏற்றுக் கொள்ளும் குழப்பம் பற்றி “செந்தில் - கவுண்டமணி” நகைச்சுவை உரையாடல் போல எழுதியிருந்தேன்.

http://www.treasurehouseofagathiyar.net/02300/2333.htm ) அகத்தியரில் அவ்வப்போது இப்படி கலாய்க்கலாம். அறிஞர் ஜெயபாரதி நல்ல நகைச்சுவை உணர்வாளர்.  இத்தனை ஆண்டுகள் கழித்து அதை மீண்டும் வெளியிடுகிறேன்.  இன்றைய வலையுலகம் இதைப் பொருத்தருளட்டும். . :-)

============

X-Mailing-List: agathiyar@egroups.com
From: "Mani M. Manivannan"
Date: Wed, 29 Sep 1999 20:11:22 -0700
Subject: [agathiyar] Re: Fw: [tamil] New word for cell phone?


>>Plug க்கு அடைப்பான் எனும்போது pager க்கு விளிப்பான் என ஏன் 
>>சொல்லக் கூடாது. அல்லது கூவி எனலாமே 
>What about 'அழைப்பான்'? 

க: டேய் செந்தில், டேஏய் செந்தில்! 

செ: என்னாண்ணேய்? விளிச்சீங்களா? 

க: அந்த விளிப்பானை எடுத்து ஒங்கண்ணியை விளி. 

செ: (கண்ணை அகல விரித்துக் கொண்டு) எந்தப் பானை அண்ணே? 

க: டேய்! ஒன் கண்ணை விழிக்கச் சொல்லலேடா, உங்க அண்ணிய விளிக்கச் சொன்னேன். 

செ: அட! அப்படிச் சொல்லுங்கண்ணே! ஆமா, எந்தப் பானைய வைச்சி அண்ணிய விளிக்கச் சொன்னீங்க? 

க: ஏ, புண்ணாக்கு! பானையை இல்லடா முண்டம்! இந்த விளிப்பான் இருக்குதுல்ல? புரியலயா? 

செ: :-( 

க: சரி அழைப்பான்னா என்னான்னு தெரியுமா? 

செ: :-@ 

க: மக்குப்புண்ணாக்கு! தகவல் ஒலி ஒளி அலைப்பானைப் பத்தியாவாது கேள்விப் பட்டிருக்கியா? 

செ: அண்ணே! திட்டுனா புரியற மாதிரி திட்டுங்கண்ணே! 

க: சரி, கரையானையாவது தெரியுமா? சரி விடு, செல்லரிக்கிற பூச்சியைக் கொண்டாந்தாலும் கொண்டு வருவே! 

செ: அட நீங்க ஒண்ணு, வீடு பூரா கரையானும் பூரானுமாத்தானே இருக்கு! 

க: ஆங்! ஒன்னைமாதிரி கரப்பானைக் கொண்டு வந்து ஊட்டுல வச்சா ஏண்டா கரையானும் பூரானும் வராது? 

செ: அண்ணே, அண்ணியை விளிக்கணுமுன்னீங்களே? 

க: டேய் முண்டம், சரி கூவி, தகவல் தாங்கி, கரைவி, அகவி எதைப்பத்தியாவது கேள்விப் பட்டிருக்கியா? 

செ: இல்லங்கண்ணே! 

க: டேய்! ஒங்கோட பேசறதுக்குப் பதிலா,

"இம்பர்வான் எல்லை இராமனையே பாடி 
எண்கொணர்ந்தாய் பாணாநீ என்றாள் பாணி"ன்னு 

பாடுனாரே அந்தப் பாணரோட பொண்டாட்டி பாணிக்கிட்டேயே சொல்லி வெளங்க வைக்கலாம்! 

செ: என்னாங்கண்ணே! (தலையைச் சொறிகிறார்) 

க: டேய் தமிழா! போய் அந்த பீப்பர், பேஜர், எடுத்துட்டு வாடா. 

செ: அட என்னாங்கண்ணேய்! ஒரே பேஜாராப் போச்சு. பேஜர்ன்னு தமில்லே சொல்லிருந்தீங்கன்னா, ஒடனே கொண்ணாந்திருப்பேன்! 

க: (அடிக்க வருகிறார்). 

எடுப்பான் கொடுப்பான் 
விளிப்பான் அழைப்பான் 
இளிப்பான் யார் யாரோ! 
அடைப்பான் யார் யாரோஓ! (என்று புலம்பிக் கொண்டே செல்கிறார்). 

மணி மு. மணிவண்ணன் 
நூவர்க், கலி., அமெரிக்கக் கூட்டு நாடுகள்