சனி, ஜனவரி 15, 2011

தமிழ் கொடிப் பாட்டு

நான்கு தமிழ்க் கொடி காணீர் - அது
வான்கண் உயர்ந்திடும் வகையினைப் பேணீர் (நான்கு)

மந்திர மன்னதோர் கம்பம் - முது
இந்திரன் தன்னைநேர் ஐவர் பூங்கொம்பில் (நான்கு)

மருத நிலந்தரு மாந்தர் - கொடை
எருது சிறந்த நல் ஏரது தேர்ந்த (நான்கு)

வாழைப் பழந்தரும் நாடு - பழஞ்
சோழர் திகழ்ந்தபோர்ப் புலிய்தன் கோடும் (நான்கு)

குறிஞ்சிப் புலத்துமுன் செல்லும் - திறம்
செறிந்துயர் சேரர்தம் வீரஞ்சேர் வில்லும்

நெயதல் நிலந்தலை செயலும் - கடல்
கொய்து பிறந்தநம் பாண்டியர் கயலும் (நான்கு)

நான்கு புறம்நூ றுடையீர் - தமிழ்
நான்கு அகம்நூ றுடையதென் றுரையீர் (நான்கு)

நாகரிகங் கண்ட பெரியீர் - தமிழ்
ஆகம் வேண்டுமென்றே ஆண்மையோ டெழுவீர் (நான்கு)

- முனைவர் எஸ். எம். நமசிவாயம்
செந்தமிழ்ச்செல்வி, மாசி, 1944, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

கருத்துகள் இல்லை: